12.4.14

ஒரு செடியும் வனமும்

புகைப்படம்: ஒரு செடியும் வனமும்
===================
இலையாகவும் மிதந்தாயிற்று.
கல்லாகவும் கிடந்தாயிற்று.
நதியாகத்தான் முடியவில்லை.
பஞ்சாகவும் திரிந்தாயிற்று.
பருந்தாகவும் பறந்தாயிற்று.
வானாகத்தான் இயலவில்லை.
கிடந்து பழகுதலுக்கும்
கிடத்தப் பழகுதலுக்கும்
இடைவெளி புரிகிறது -
ஒரு செடிக்கும்
ஒரு வனத்துக்குமானது
போல.
இலையாயும் மிதந்தாயிற்று.
கல்லாயும் கி
டந்தாயிற்று.
நதியாகத்தான் முடியவில்லை.
பஞ்சாயும் திரிந்தாயிற்று.
பருந்தாயும் பறந்தாயிற்று.
வானாகத்தான் இயலவில்லை.
கிடந்து பழகுதலுக்கும்
கிடத்தப் பழகுதலுக்கும்
இடைவெளி புரிகிறது -
ஒரு செடிக்கும்
ஒரு வனத்துக்குமானது
போல.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...