26.6.10

பரிகாரம்



தோப்பை அழித்து எழுந்த கட்டிடம்
நின்றது பாதியில்
குருவிகளின் சாபத்துடன்.
பரிகாரம் தேடுகிறது படுக்கை அறை
கூட்டுக்கு இடம் தந்து.


4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ஓ...செய்கிற பாவத்துக்குப்
பரிகாரமும் செய்கிறார்களா !

Madumitha சொன்னது…

ஆம் சுந்தர்ஜி. பறவைகளின் சாபம்
ஒரு நாள் பூமியை புகைமண்டலமாய்
மாற்றத்தான் போகிறது.

பத்மா சொன்னது…

அருமை சுந்தர்ஜி ..
படம் அதை விட ..
அந்த நீல முட்டையை கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹேமா.குருவிகள்னா சும்மாவா?

நன்றி மது.பறவைகளின் சாபம் நம்மைச் சும்மா விடாது.

நன்றி பத்மா.நீலமுட்டையைக் குருவி கேட்டா நான் என்ன செய்வேன்?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...