22.4.11

பந்தயம்
















பகடைக்காய்களின்
குலுங்கிக்கொண்டிருக்கும்
பக்கங்களில்-

சுண்டப்படும்
நாணயங்களின்
முடிவில்லா
சுழற்சியில்-

பாய்ந்து செல்லும்
குதிரைகளின்
கால்களுக்கு
இடைப்பட்ட
தொலைவுகளில்-

மையப்புள்ளிக்கும்
நோக்கி எறியப்படும்
அம்புகளுக்கும்
இடையே-

நிமிர்தலுக்கும்
கவிழ்ந்திருக்கும்
மூன்று சீட்டுக்களுக்கும்
நடுவே-

காத்திருக்கிறது

சாகசங்கள் கசியும்
-கிடைக்கலாம்
கிடைக்காமலும் போகலாம்-
எனும் வாக்கியத்தில்
ஒளிந்திருக்கும்
திடுக்கிடல்.

7 கருத்துகள்:

Ramani சொன்னது…

கலந்து கொண்டால் வாய்ப்பு
முயற்சியின்றி காத்திருப்பு எதிர்பார்ப்பு
கிடைத்தால் அதிஷ்டம் என
மூன்றுக்குரிய தொடர்புகளை
அருமையாக நினைவுப்படுத்திப்போனது
உங்கள் பதிவு
சிந்தனையை தூண்டிப் போகும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

RVS சொன்னது…

யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கோ அவர்களுக்கு கிடைக்கும்...
பந்தயத்திற்கு சவாலான எழுத்துக்கள். அற்புதம் ஜி! ;-))

கமலேஷ் சொன்னது…

உங்கள் வரிகளை படிக்கையில் ஏனோ என் நினைவில் இப்படி ஒரு காட்சி வந்து தொலைக்கிறது சுந்தரண்ணே...

பிழைக்கலாம்
பிழைக்காமலும் போகலாம் எனும்
மருத்துவனிடம் இருந்து
கடவுள் நோக்கி திரும்பும்
கூப்பிய பிரார்த்தனை கரங்கள்.

அங்கும்
இருப்புக்கும், இன்மைக்கும் இடையில் இயங்கும்
அதே பந்தயம்,
அதே சாகசம் ,
அதே திடுக்கிடல்...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், திடுக்கிட வைக்கும் வரிகள், குதிரையின் வேகமான கால்கள் போலவே கிடைத்துவிட்டன, எங்களுக்கு.

பாராட்டுக்கள்

ஹேமா சொன்னது…

எப்போதும் வரும் உங்கள் கவிதைகளே ஒரு சாகசம்தான் சுந்தர்ஜி.எல்லாக் கவிதைகளையுமே வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.அப்படியே !

G.M Balasubramaniam சொன்னது…

Antha thitukkital anupavaththukkaakavae vaazhkkaiyai tholaiththavarkal aeraalam. Athu ishtamaaka varuvathallavaa athirshtam.? Neerottam pola kavithai ezhuthukireerkal Suntharji.

சிவகுமாரன் சொன்னது…

எதிர்பார்ப்புகளும் திடுக்கிடலுமாய் வாழ்க்கை.
சுவாரசியமும் சோகமும் நிறைந்து காணப்படும் வாழ்வில் பந்தயக் குதிரைகளாய் நாம் .
சிந்தனையைத் தூண்டும் அருமையான கவிதை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...