26.4.11

மழைக்காலம்


























இப்போது
மழை வந்ததை
யாரும்
எதிர்பார்க்கவில்லை.

சில பேர்
கூரைகளுக்கடியிலும்

சில பேர்
வானத்தின் கீழுமெனப்
பிரிந்து கொள்ள

மழை வலுத்தது.

யாரையும் பேசவிடாமல்
வாயை அடைத்தது
மௌனம்.

மழை வாசனை
மண்ணோடும்
மண்ணில் கிடந்தவற்றோடும்
கரைந்து புதுக்கலவையானது.

என் வாய்
எச்சில்
மழைவாசனையாய்
இருந்தது.

நிர்வாணம் தவிர்த்து
மற்றெல்லாவற்றையும்
கரைக்கும் மூர்க்கத்துடன்

மழை இன்னும்
வலுத்தது.

மழையின் நிழலாக
வீட்டின் வாசல் எல்லாம்
கோலமாய்ப்
பள்ளங்கள்.

மழை எப்போது பெய்யுமெனக்
காத்துக்

கடைகளுக்குக் குடையை
விரித்துப் போகும்
குழந்தைகளைப்
பார்க்கமுடியவில்லை.

இப்போது
மழையைத் தவிர
தெருக்களில்
யாருமில்லை.

இந்தக் கவிதையின் முதல்வரி போலவே எதிர்பாராது இன்றும் மழை பெய்தபடி இருந்த இந்தக் காலையில் நினைவுகள் பின்பக்கமாய்ப் பயணித்தன.

23 வருஷங்களுக்கு முன்பு இந்தக் கவிதை ஜூன் 1988 கணையாழியில் வெளிவந்திருந்தது.அப்போது எனக்கு 22 வயது.

அசோகமித்திரனும் நாஞ்சில் நாடனும் எழுதிய அதே இதழில் சுந்தர்ஜியும் என்று நிதானிக்க அவகாசம் வேண்டியிருந்தது.அசோகமித்திரன் கௌரவ ஆசிரியராக இருந்தார்.

தொடர்ச்சியாகக் கணையாழி-முன்றில்-இன்று-கனவு-பாலம்-காலச்சுவடு ஆகியவை என் கதை-மொழிபெயர்ப்பு-கவிதைகளை வெளியிட்டு எனக்குக் கிறுக்குப் பிடிக்க வைத்திருந்தன.

இந்தக் கவிதையை இப்போது திருப்பிப் படிக்கும்போது ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் என்னைத் தேடுவதாய் இருக்கின்றன நினைவுகள்.

இன்றைய ஒப்பனைகள் எதுவும் இல்லாத என் 22 வயதுக் கவிதை எனக்கு வசீகரமாகவே தெரிகிறது.

வேறு வழியில்லை.படித்து வையுங்கள். 

21 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//என் வாய்
எச்சில்
மழைவாசனையாய்
இருந்தது.//

//மழையின் நிழலாக
வீட்டின் வாசல் எல்லாம்
கோலமாய்ப்
பள்ளங்கள்.//

மழைக்கவிதை கோடையில் பெய்யும் அடைமழை போலவே வெகு அருமை.

//அசோகமித்திரனும் நாஞ்சில் நாடனும் எழுதிய அதே இதழில் சுந்தர்ஜியும் //

என்பதில் இன்று எனக்கொன்றும் ஆச்சர்யமில்லை. ஆனால் நீங்கள் அப்போது 22 வயதே ஆன வாலிபன் என்பது தான் ஆச்சர்யமாக இருந்தது.
அந்த வயதில் இது மிகப்பெரியதொரு சாதனை தான்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk

ராகவன் சொன்னது…

இப்போது மழையைத் தவிர தெருக்களில் யாரும் இல்லை...

அற்புதமான கவிதை... சுந்தர்ஜி...

அன்புடன்
ராகவன்

RVS சொன்னது…

நீங்கள் 22 லும் சரி... வரப்போகும் 62 -லும் சரி.. வசீகரன் தான்... உங்கள் எழுத்துக்களில் நீங்கள் வசீகரன்... குரலில் கூட.. ;-))

மாலதி சொன்னது…

//என் வாய்
எச்சில்
மழைவாசனையாய்
இருந்தது.//

//மழையின் நிழலாக
வீட்டின் வாசல் எல்லாம்
கோலமாய்ப்
பள்ளங்கள்.//
இப்போது மழையைத் தவிர தெருக்களில் யாரும் இல்லை...

அற்புதமான கவிதை...

க ரா சொன்னது…

கவிதை அருமை சுந்தர்ஜீ :)

மிருணா சொன்னது…

//இப்போது
மழையைத் தவிர
தெருக்களில்
யாருமில்லை//
மழையின் பிரமாண்டமும், ஒரு தனிமையும் துலங்கும் வரிகள். நன்றாக இருக்கிறது. ஒரு வித freshness தென்படுகிறது கவிதையில். உங்கள் மொழிபெயர்ப்பு கவிதையை காலச்சுவடு தொகுப்பொன்றில் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது.

பத்மா சொன்னது…

wowwwwwwww am envious

Ramani சொன்னது…

ஒப்பனைகள் தேவையற்ற அழகிய படைப்பு
மழையைத் தவிர யாருமில்லை என்பதே
நிறையச் சொல்லிப்போகிறது
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

காமராஜ் சொன்னது…

அழகிய கவிதை. ஆஹா ஆனந்தமான நினைவுகள்.

ஹ ர ணி சொன்னது…

கவிதையின் முதல் வரியைப் படித்தவுடன் கடைசிவரி உடனே நினைவுக்கு வர அந்தக்கால கணையாழிக்குச் சென்றுவிட்டேன். மறக்க முடியாத கவிதை சுந்தர்ஜி. இதை நானும் மதுமிதாவும் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.

ரிஷபன் சொன்னது…

கணையாழி என்றதும் அசோகமித்திரன் நினைவு வந்து விடுகிறது.. என் சிறுகதைகள்.. கவிதை அதன் பத்தாண்டு காலத் தொகுப்புகளில் வெளிவந்தபோது என் மகிழ்ச்சி அளவிடமுடியாதது.. கணையாழியில் என் சிறுகதை பார்த்து கல்கி ராஜேந்திரன் ஸார் எனக்கு அனுப்பிய கடிதம் இன்னமும் என்னிடம் பழுப்பேறிய இனலண்ட்.. 'உங்கள் படைப்புகளை கல்கிக்கு வரவேற்பதாய்' நீங்களும் கணையாழி குடும்ப அங்கத்தினர் தான் என்று அறிய உற்சாகம்.

ஹேமா சொன்னது…

அதே சுந்தர்ஜிதான் இப்பவும்.அதே மழை வாசம் !

எல் கே சொன்னது…

அருமை சுந்தர்ஜி. இப்பலாம் கொஞ்சம் சோம்பேறித்தனம் ஜாஸ்தி ஆகிடுச்சி

Balaji saravana சொன்னது…

மழைநாளின் மனதின் நுண் அவதானிப்புகள் அற்புதம் சுந்தர்ஜி!

Nagasubramanian சொன்னது…

நல்ல கவிதை.
ஆக மொத்தம் உங்களுக்கு 45 வயசு :)

சுந்தர்ஜி சொன்னது…

என் ப்ரோஃபைல்லயே என் வயசு இருக்கே நாக்ஸ்.இத்தனை நாள் வயசு என்னவா இருக்கும்னு யோசிச்சது தெரியுது உங்க பின்னூட்டத்துல.

Nagasubramanian சொன்னது…

அட உங்க போட்டோ அவ்வளவு youthful ஆ இருந்ததுங்க ;)
உங்களுக்கு 35 தான் இருக்கும்னு நெனச்சேன்

A.R.ராஜகோபாலன் சொன்னது…

கைகளில் அள்ளிய நீர்
விரல்களின் வழியே கவிதை
மழையாய் வழிகிறது !
மனதை மெல்ல
குளிராய் வருடுகிறது !
எழுதி முடித்தபின்
ஒரு வர்ண வானவில் ............

சிவகுமாரன் சொன்னது…

\\ வேறு வழியில்லை படித்து வையுங்கள்//

பொக்கிஷமய்யா இது படித்து பாதுகாத்து வையுங்கள் என்று சொல்லுங்கள். .

G.M Balasubramaniam சொன்னது…

எப்போது மழை வரினும் நிகழ்வுகள் மாறுவதில்லை. கவிதை வரிகள் சாசுவதத் தன்மை பெற்றிருக்கிறது.

இரசிகை சொன்னது…

\\ வேறு வழியில்லை படித்து வையுங்கள்//


padichchuttu vaiyurathu polavaa yezhuthiyirukkeenga...:)

vaazhthiye aakanum.

vaazhthukal sudarji.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...