28.4.10

நிசிமலர்



நிசியின் மலர் மொட்டவிழ
மறைந்திருக்கிறாய் ஒரு திருடியாய்.
கனவின் உடை துறந்து மெல்ல
வெளிப்படுகிறேன் கள்வன் நான்.
என் கோப்பையின் தளும்பி வழியும்
நிலவின் மதுவூட்டத் திளைக்கிறாய்.
யாருக்கும் கேட்காத உன்னத இசையை
இசைக்கிறேன் உன் தின்பண்டச் செவிகளில்.
வெட்கம் சொட்டும் விரல்களால்
வரைகிறாய் உன் மழலை மொழி.
இறுதியாய்க் காற்றென ஒவ்வொரு
இதழாய் மெல்லத் திறக்கையில்
மயங்கிச் சரிகிறாய் பூம்பாரமாய்.
எப்போதுதான் பார்க்க இருக்கிறாய்
மொட்டவிழும் ஒரு மலரை?

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...