30.6.10

எல்லாமே நம்பிக்கையில்தான்


உங்களிடம்
ஒரு கவிதை சொல்லப் போகிறேன்
காதுகளை மூடிக் கொள்ளலாம் நீங்கள்
வருத்தமில்லை எனக்கு
உதட்டசைவிலும் என் கவிதை
உங்கள் கண் வழியே புகுந்துவிடும்
கண்களையும் மூடிக் கொள்ளலாம்
அப்போதும் வருத்தமில்லை
காற்றிலே அலைந்து திரியுமென் கவிதை
என்றேனும்
கண்களை விழித்தீரெனில்
உள் புகுந்து அதிர்ச்சியூட்டும்
பிடிவாதமாக மூடிக் கொள்ளலாம் நீங்கள்
அப்போதும் வருத்தமில்லை எனக்கு
உம் வாரிசாலோ வாரிசின் வாரிசாலோ
உணரப்படும் என் கவிதை
என்றேனும் ஒரு நாள்
எனவேதான்
வருத்தமில்லை எனக்கு
நஷ்டமில்லை.
எனது வாள்
கூர்வாளொன்று
எப்போதும் என்னிடம்.
நண்பர்களைக் கண்டால்
முதுகுக்குப் பின் ஒதுங்கிவிடும்
அபிமானிகளைக் கண்டால்
உரையுனுள்ளிருந்து
கம்பீரமாய் எட்டிப்பார்த்து
அவர் முகம் நோட்டமிடும்
வேண்டாதவரென்றால்
நாக்கில் வந்து ஒட்டிக் கொள்ளும்
அழகிய பெண்களை எதிர்கொண்டால்
முலைகளை அறுத்து ரசித்து மகிழும்
குழந்தைகளிடம்
பிரியம் காட்டுவதாய் நினைத்து
குரல்வளையை கீறிவிடும்
ரோஜாக்களைக் கொய்து
கைப்பிடியில் சூடி மகிழும்
வாளுடன் எதிரி வந்தால்
உறையினுள் பதுங்கிக்கொள்ளும்
வாளின்றி வரக்கண்டாலோ
உறைவிட்டுக் கிளம்பிப் பயமுறுத்தும்.
விட்டெறியும் மார்க்கமறியேன்
என்னிடம் எப்போதும்
கூர்வாளொன்று.
தூரத்துப் பார்வை
நேற்று என்னூரில் பார்த்த
அதே காக்கைகள்
அதே ஜோடி மைனாக்கள்
அதே வண்ணப் புறாக்கள்
அதே பச்சைக்கிளிகள்
அதே சிட்டுக் குருவிகள்
மரங்களும்
கிளைதாவும் அணில்களும்
அப்படியேதான்
மனிதர்கள் மட்டும்
வேற்று முகங்களுடன்.
-ராஜமார்த்தாண்டன்

5 கருத்துகள்:

பா.ராஜாராம் சொன்னது…

விடுபட்டிருந்த கவிதைகள் எல்லாம் வாசித்தேன் சுந்தர்ஜி. தஞ்சாவூர் கவிராயர் குறித்தான விபரங்கள் கிடைக்குமா சுந்தர்ஜி?

rajaram.b.krishnan@gmail.com

ஹேமா சொன்னது…

மனிதம் இழந்த மனிதனின் மனங்கள் மாறுபடுவதால் முகங்கள் காட்டுகிறது உள்மனதை !தத்துவமான கவிதை.ராஜமார்த்தாண்டன் பாராட்டுக்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பா.ரா. எனக்காக நேரமொதுக்கியதற்கு.இன்று நேரமின்றி.நாளை அவசியம் மின்னஞ்சல் எழுதுவேன் த.க.குறித்து.

நன்றி ஹேமா.ராஜமார்த்தாண்டனின் ஆத்மாவைத் தொடட்டும் உங்களின் பாராட்டுக்கள்.

கமலேஷ் சொன்னது…

மிக அருமையான கவிதை...உங்களின் தளத்தில் tamilish ன் வோட்டு பட்டையை இணையுங்களேன் நண்பரே..இதை போன்ற அருமையான கவிதைகள் நிறைய பேரை சென்றடையட்டும்..

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கமலேஷ்.முயல்கிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...