23.3.14

இரு திறவுகோல்கள்


#
மெளனம் என்பது
நீங்கள் நினைப்பது போல்
அமைதியல்ல.
சம்மதம் அல்ல.
சகித்தல் அல்ல.
தத்துவச் செறிவில் தோய்ந்த
நிறைவுமல்ல எப்போதும்.
தளும்பும் குளத்தின்
தாமரையாய் முகம் காட்டி -
அடிமென்மணலின்
ஆழங்களில் புரள்கின்றன
அதன் கோக்க இயலாச் சொற்கள்.


#
நீ ஏற்றுக் கொண்டதும்
வியப்பாய் இல்லை.
நிராகரித்து நகர்ந்ததும்
துயரூட்டவில்லை.
நான் சுமந்து திரியும்
ஒற்றைத் திறவுகோல் 
செய்வதில்லையா
ஒரு நேரம் திறக்கவும்
ஒரு நேரம் மூடவும்?

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதனதன் வேலையை அதது செய்துவிட்டால் வியப்பேது..?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...