#
என் சலனமற்ற குளத்தில்
உன் கூழாங்கல்லை எறிந்து
மூழ்க வைக்கிறது காலம்.
அலையின் சலனம்
மொக்குகள் மலரக் காத்திருக்கும்
தாமரைகளைத் தொட்டுச் சமனப்பட -
மீண்டும் குளம் ஆசை கொள்கிறது
மற்றொரு கல்லெறிக்காக.
அலை தயாராகிறது
தாமரையின் தொடலுக்காக.
#
நீயோ பெருமழை.
நான் உன் சிறுதுளி.
நீ பொழிகிறாய்.
நான் வீழ்கிறேன்.
கொடுந்தூரம் கடந்து
கரிக்கும் பெருங்கடலில்
பொழிந்து உப்பாகிறாய் நீ.
ஒற்றைச் சிப்பியின்
இதழை முத்தமிட்டு
ஸ்வாதி முத்தாகிறேன்
நான்.
என் சலனமற்ற குளத்தில்
உன் கூழாங்கல்லை எறிந்து
மூழ்க வைக்கிறது காலம்.
அலையின் சலனம்
மொக்குகள் மலரக் காத்திருக்கும்
தாமரைகளைத் தொட்டுச் சமனப்பட -
மீண்டும் குளம் ஆசை கொள்கிறது
மற்றொரு கல்லெறிக்காக.
அலை தயாராகிறது
தாமரையின் தொடலுக்காக.
#
நீயோ பெருமழை.
நான் உன் சிறுதுளி.
நீ பொழிகிறாய்.
நான் வீழ்கிறேன்.
கொடுந்தூரம் கடந்து
கரிக்கும் பெருங்கடலில்
பொழிந்து உப்பாகிறாய் நீ.
ஒற்றைச் சிப்பியின்
இதழை முத்தமிட்டு
ஸ்வாதி முத்தாகிறேன்
நான்.
1 கருத்து:
ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...
கருத்துரையிடுக