காத்திருக்கிறேன் காரணங்களும்
சூழ்நிலைகளும் நிசப்தமாய்த் தொடரத்
தவிக்கிறது நமக்கான பொழுது.
உப்பில் ஊறிய நாளின் நெருக்கடிகளை-
கடக்கும் பாதையின் நெரிசல்களை- நன்கறிவேன்.
எப்படியும் நீ வந்து விடுவாய்.
இசைக்காத பியானோவின்
பெரும் அமைதியாய்ச் சொட்டுகிறது
நீயற்ற பொழுதின் அனல்.
காரணமற்ற தாமதம் தொடரத்தொடர
விபத்துக்களின் கருஞ்சாயம் பூசித்
துயருற்றது என் நண்பகல்.
2 கருத்துகள்:
//இசைக்காத பியானோவின்
அமைதி//
துயரந்தோய்ந்த
வரிகள்.
நல்ல கவிதை சுந்தர்ஜி.
உப்பில் ஊறிய
நாளின் நெருக்கடிகளை-
அப்பா என்ன கரிப்பு
கருத்துரையிடுக