15.5.10

முள்நிலா



வெகு நாளாயிற்று நிலா பருகியும்
நக்ஷத்திரங்கள் பறித்தும்.
கால முட்களின் கூரால்
கிழிபடுகிறதென் பயணத்தின் வரைபடம்.
நம்பிக்கையின் நங்கூரத்தைத் தாக்குகிறது
அவநம்பிக்கையின் சம்மட்டி.
தத்தளித்துக் குற்றுயிர் பற்றி நிமிர்கையில்
புலரியின் கைகளில் மெல்லப் படர்கிறது
நாளையின் பசுங்கொடி.
அதன் முதல் மலர் எழுதத் துவங்குகிறது
என் அடுத்த கவிதைக்கான முதற் சொல்லை.

16 கருத்துகள்:

Anonymous சொன்னது…

காலம் நம்மைப் பிழிவதை யார் தடுக்க முடியும்?சொக்கினேன் சுந்தர்ஜி.
பா.தியாகு.

Anonymous சொன்னது…

முதல் சொல்லை எழுதிய மலரின் கையெழுத்து அழகு.(இப்போதான் தெரியுது நிலாவும்,நக்ஷத்திரமும் காணாமப்போற காரணம்)
கலைவாணி.

இரசிகை சொன்னது…

padam........superb[thalaippum]..!

unga blog - i follow seiyum fecility illaiyo??
follower aaka aasai.

ஹேமா சொன்னது…

இப்போ நேரம்கிடைச்சிருக்கு.
கவிதை எழுதுங்க.வாசிக்க நாங்க இருக்கோம்.ஆனா மலரையும் நிலவையும் நட்சத்திரங்களையும் அந்தந்த இடத்திலேயே விட்டு வையுங்கோ சுந்தர்ஜி.

Madumitha சொன்னது…

சபாஷ் சுந்தர்ஜி.

பத்மா சொன்னது…

ரொம்ப பாசிடிவா இருக்கு சுந்தர்ஜி .எண்ணங்களை வார்த்தைகளாக்கி அதனையும் கவிதையாக்கி கிறங்கடிக்கிறீர்கள்

Anonymous சொன்னது…

இக்கவிதையில் சொட்டும் தமிழின் இனிய சாற்றை மிடறு மிடறாய்ப் பருகினேன்.
//புலரியின் கைகளில் மெல்லப் படர்கிறது நாளையின் பசுங்கொடி//
என்னவொரு அழகான வார்த்தை நெசவு!அந்த முதல் மலர் எழுதும் முதற்சொல் வாசிக்கும் உள்ளங்களில் பூ வைத்துப் போகிறது.நன்றி.
உஷா

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி-
தியாகு.
கலைவாணி.
ரசிகை.
ஹேமா.
மதுமிதா.
பத்மா.
உஷா.

பத்மா சொன்னது…

திரும்ப வந்து படிக்கிறேன் சுந்தர்ஜி ,நட்சத்திரங்கள் பறித்தல்! என்ன ஓர் அழகிய சொல்லாடல் அது

சுந்தர்ஜி சொன்னது…

மறு வாசிப்புக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி பத்மா.

சுந்தர்ஜி சொன்னது…

பின் தொடரும் வசதி தற்காலிகமாக இல்லை ரசிகை. கிடைத்தவுடன் தருகிறேன்.

அஹமது இர்ஷாத் சொன்னது…

நல்லாயிருக்கு... வார்த்தைகளின் கோர்ப்பு அருமை...

சுந்தர்ஜி சொன்னது…

முதல் வருகை.வாருங்கோ அஹமது இர்ஷாத்.நன்றி.

Matangi Mawley சொன்னது…

"கால முட்களின் கூரால்
கிழிபடுகிறதென்
பயணத்தின் வரைபடம்."...

arumai arumai.. mikavuk azhagaana varikal... pugaippadamum mika poruththamaaga ullathu!

keep writing!

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மாதங்கி.ரொம்ப நாளாச்சு நீங்க வந்து.தொடர்ந்து எழுதுவேன்.

Anonymous சொன்னது…

அவநம்பிக்கை சம்மட்டி துருவாய் உதிர்ந்து பூக்களை ப்ரசவித்தது.சூப்பர் சுந்தர்ஜி.
-ஜெ.ஃப்ராங்க்ளின் குமார்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...