1.5.10

இரவு முழுதும் உட்கார்ந்திருந்தது-பை ஜுயி


ஒரு முழு நாளும்
என் வீட்டு வழிநடையில்
இருட்டும் வரையில்
காத்து நின்றிருந்தேன்;
பின் இரவு முழுவதும்
என்னறையில்
விடியும்வரை
உட்கார்ந்திருந்தேன்;
நான் எதுவும் சொல்லாமல்
இதற்கான காரணத்தை
நீ அறிய முடியாது.
இவை அனைத்தையும்
கவனித்திருந்தால்
நீ கேட்டிருக்கக்கூடும்
இரண்டு அல்லது மூன்று
பெருமூச்சுக்களை.

4 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

அந்த பெருமூச்சுகள் எல்லவற்றையும் சொல்லி விடும்.. கேட்டிருந்தால்..

பத்மா சொன்னது…

சுடும் மூச்சு

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி
ரிஷபன்.
பத்மா.

இரசிகை சொன்னது…

moochchum pesum.....:)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...