26.2.11

முடிச்சு



I
கண்ணாடியின்றி
வந்தது நீ.
அடையாளம் தெரியாது
குழம்பியது நான்.

II

எது மிக விருப்போ
அதைத் தொலைவிலும்
எது மிகத் தொலைவோ
அதை விருப்பெனவும் வை.
ஒரு ஜதை செருப்புகளைப்
போலல்ல
விருப்புக்கும்
நமக்குமான இடைவெளி.

III

உள்நுழைகையில்
இருளாகவும்
வெளிக் கிளம்புகையில்
வெளிச்சமாயும்
இருக்கிறது வீடும் வாழ்க்கையும்.

30 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டாவது மிகவும் பிடித்தது…. எத்தனை பெரிய தத்துவம்?

ரிஷபன் சொன்னது…

ஒற்றை வரியில் மனசுக்கு முடிச்சு போட்டு விடுகிற எழுத்து..

க ரா சொன்னது…

ஜென் கதைகள் வாசித்தது போன்ற ஒரு உணர்வு ஜீ :)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நீங்கள் போடும் முடிச்சு எப்போதும் மணி முடிச்சு தான் போங்கள். என்னைப் போன்ற சாமானியர்கள் யாரும் லேசில் அதை அவிழ்த்து விட முடியாதது.

ஒருவேளை அவ்வாறு கஷ்டப்பட்டு அவிழ்த்தாலும் முடிச்சவிக்கி என்ற கெட்ட பெயர் வந்து விடும்.

பின்புற பேக்ரவுண்டு யானை போல ஏதேதோ பெரிய விஷங்களை சிறிய எழுத்துக்க்ளில் சிறப்பாகத் தான் தருகிறீர்கள்.

ரமணாவுடன் அந்த யானையின் மீது ஏறி என் ப்ளாக் பக்கம் வாருங்கள்.
இங்கு எலித்தொல்லை ஜாஸ்தியாக உள்ளது.

யானை அவ்விடமிருந்து நகர்ந்தால் தான் கண்ணாடியின்றி கொசுப்போன்ற எழுத்துக்கள் அடையாளம் தெரியும் அனைவருக்கும்.

RVS சொன்னது…

ஜீ என்னது டெய்லி விருந்து வைக்குறீங்க.. தினம் தினம் கல்யாண சாப்பாடு.. ஜோரா இருக்கு..
//எது மிக விருப்போஅதைத் தொலைவிலும்எது மிகத் தொலைவோஅதை விருப்பெனவும் வை// அமர்க்களமான உண்மை!!

நிலாமகள் சொன்னது…

1 . புன்னகை வரவழைத்தது.

2 . நல்ல போதனை.

. 'இருக்கிறது...' "இருக்கவேண்டும்!"

Ramani சொன்னது…

உள் நுழைகையில் இருட்டாகவும்
வெளியேறுகையில் வெளிச்சமாகவும்
இருக்கிறது வாழ்க்கையும்....
வீட்டு வாசலை எத்தனை
ஆயிரம் முறை கடந்திருக்கிறேன்
ஸ்மரணையற்று என நினைத்துக்கொண்டேன்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam சொன்னது…

மூன்றாவது “பிட்”க்கு என் உள்ளத்தில் என்னென்னவோஅர்த்தங்கள் தோன்றுகின்றன. சில சமயம் கவிதை எழுதுபவரே எண்ணாத கோணமாயிருப்பது போல. சிந்திக்க வைக்கும் வரிகள் .வாழ்த்துக்கள்

எல் கே சொன்னது…

//எது
மிக விருப்போ
அதைத் தொலைவிலும்
எது
மிகத் தொலைவோ
அதை
விருப்பெனவும் வை///

உண்மை இதைதான் நாம் செய்ய வேண்டும். மூன்றாவதும் பிடித்தது.

மதுரை சரவணன் சொன்னது…

அனைத்தும் அருமை.வாழ்த்துக்கள்

பத்மா சொன்னது…

ஏன் பக்கத்திலேயே இருந்தா என்னவாம்?
நா மாட்டேன் ஜி ..மிக விருப்பை பக்கத்தில் தான் வைப்பேன் ...மைசூர் பாக் இருக்கும் டப்பாவை போல...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அக்கரை பச்சைதானே!
எது மிகத்தொலைவோ அது விருப்புதான்!!

Gowripriya சொன்னது…

இரு ஜதை
செருப்புக்களைப்
போலல்ல
விருப்புக்கும்
நமக்குமான
இடைவெளி.


how true!!!

சிவகுமாரன் சொன்னது…

பிரமித்துப் போய் நிற்கிறேன் ஜி

Nagasubramanian சொன்னது…

//உள்நுழைகையில்
இருளாகவும்
வெளிக்கிளம்புகையில்
வெளிச்சமாயும்
இருக்கிறது
வீடும் வாழ்க்கையும்.//
உங்கள் கவிதைகளில் ஜென் வாசம் தூக்குகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

பாராட்டுக்கு நன்றி ரிஷபன்.

உங்கள் எழுத்தையும் அப்படித்தான் நினைக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

எனக்கும் மிக நெருக்கமான கவிதை அது வெங்கட்.

நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

அடிப்படையில் நம் வாழ்வின் ஆதாரமே தத்துவத்தோடான தொடர்புதான் ராமசாமி இப்படிப் பார்க்க வைக்கிறது.

நன்றி தொடர் வாசிப்பிற்கு.

சுந்தர்ஜி சொன்னது…

முடிச்சவிக்கி என்ற பெயர் கேட்டு எத்தனை நாளாச்சு? நிறைய சரக்கு வெச்சுருக்கீங்க.

எலிஸபத் டவர் முடிந்த பின் மொத்தமாக வருவோம் கமெண்ட்டுக்கு என்றிருந்தேன் கோபு சார்.

நீங்க சொன்ன உடனேயே டெம்ப்ளேட்டை மாற்றிவிட்டேன்.

சுந்தர்ஜி சொன்னது…

ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை ஆர்விஎஸ்.

நீங்க பக்கம் பக்கமா எழுதித் தள்றீங்க.

நம்மளால அவ்வளவெல்லாம் முடியலையேன்னு ஏக்கமா இருக்கு.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி நிலாமகள்.

தீர்க்கமான பார்வை உங்களது.

சுந்தர்ஜி சொன்னது…

//சில சமயம் கவிதை எழுதுபவரே எண்ணாத கோணமாயிருப்பது போல//

அருமை பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

பொதுவாகவே நீங்கள் பார்க்கும் விஷயங்கள் எல்லாமே தத்துவார்த்தமான பார்வையுள்ளவைதான்.

ஏதோ ஒண்ணு ரெண்டு நானும் நடுவுல ட்ரை பண்ணிப் பாக்கறேன்.

ஸ்மரணையெல்லாமல் பெரிய வார்த்தை ரமணி சார்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சரவணன்.தொடர்ந்து வாங்க.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி எல்.கே.

தொடர் வாசிப்புக்கு நன்றி.

உங்கள் தளத்தையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வாரத்தில் முடித்துவிடுவேன்.

சுந்தர்ஜி சொன்னது…

மைசூர்பாகை பக்கத்தில் வெச்சுக்கப் போறீங்களா?

இதெல்லாம் இப்பத் தெரியாது.ஒருநாள் சொல்லுவீங்க.

அவன் சரியாத்தான் சொன்னான்னு.பாக்கலாமா பத்மா?

சுந்தர்ஜி சொன்னது…

நம் பிரச்சனை அதுவல்ல ராஜராஜேஸ்வரி.

எது மிக விருப்போ அதைப் பக்கத்தில் வைத்திருப்பதுதான்.

சுந்தர்ஜி சொன்னது…

அதெல்லாம் வேண்டாம் சிவா.ப்ளீஸ் உட்காருங்க.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கௌரிப்ரியா.

Unknown சொன்னது…

111 irulil than velicham theriyum. Vazhkayum adhe. Nice

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...