9.10.13

ஒரு நல்ல முயற்சிக்கு ஆதரவளியுங்கள்.

தமிழின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பான ”மஹாபாரத கும்பகோணப் பதிப்பு” தற்போது அச்சில்இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். 

இந்நூல் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு லட்சம் ச்லோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு திரு. ம. வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன. 

மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றது. ஒருவர் மொழிபெயர்ப்பது, அவராலேயே சரி பார்ப்பது, பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் புடமிடப்பட்ட மொழிபெயர்ப்பு. 

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் குறைந்தது நூறு பேர் முன்வந்து வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கும்போது, இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டு மூன்று நான்கு மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும். 

விலை ரூ.5000 இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு விலை மதிப்பற்ற பொக்கிஷம் என்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு. வெங்கட்ராமணன் அவர்களை09894661259 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது venkat.srichakra6@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களது பெயர்முகவரி,தொலைபேசி எண்ணுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி தாங்கள் வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கலாம். 

குறைந்தது நூறு பேர் தங்களது பெயரைப் பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தையும், எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்? எப்படிச் செலுத்த வேண்டும்? போன்ற விவரங்களையும் அறிவிப்பார். 

என் தளத்தைத் தொடரும் எல்லா நண்பர்களும் விரைந்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்து ஆதரவளித்து ஆயிரம், பத்தாயிரமாகப் பல்கிப் பெருகத் துணை நிற்குமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

இம் முயற்சிக்கு ஆதரவளிக்கும் நல் உள்ளங்கள், பாரதத்தின் செழுமையான ஒரு விருட்சத்துக்கு நீர் பாய்ச்சியவர்களாவார்கள். 

2 கருத்துகள்:

விஸ்வநாத் சொன்னது…

மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்;

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மனம் தொட்டு நன்றி விச்சு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...