31.10.10

புராதனம்


என் காதிடுக்குகளில்
சிகரங்களின் துகள்.

கரைத்ததென்னை
ஆதிகாலத்தின் மாமழை.

வீட்டு முற்றமெங்கும்
மூடுகிறது
நேற்றின் வான்வெளி.

மேலே படர்கிறது
யுகங்களின் காற்றுண்ட
நாளையின் ஊழிச்சுடர்.

கடந்து செல்கிறேன்
நொடியில்

மிகப் புராதனக் கோப்பையில்
காலம் பருகியபடி.

4 கருத்துகள்:

மிருணா சொன்னது…

//கடந்து செல்கிறேன்
நொடியில்
மிகப் புராதனக் கோப்பையில்
காலம் பருகியபடி//
முதன் முதலாக திருவிடைமருதூரின் பிரமாண்டமான நெடிய பிரகாரங்களின் வழி நடந்தபோது இப்படித்தான் தோன்றியது. நல்ல வரிகள்.

மிருணா சொன்னது…

யானை கவிதைப் பதிவிற்கு நன்றி திரு.சுந்தர்ஜி.

ரிஷபன் சொன்னது…

மிகப் புராதனக் கோப்பையில்
காலம் பருகியபடி.

சொல் புதிது.

சுந்தர்ஜி சொன்னது…

சரியாய் உணர்ந்தீர்கள் சைக்கிள்.கோயில் ப்ரஹாரங்களில் என் மனதில் ஓடும் நினைப்புகளும் இதுதான்.

புதிய சொல் உணர்ந்தமைக்கு நன்றி ரிஷபன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...