12.10.10

அதனதன் தன்மை

















உன்னதமானவை உருவமற்றவை
காற்றையும் கடவுளையும் போல.

எல்லையில்லாதவை
கொடையளிப்பவை
கடலையும் அன்பையும் போல.

பயனற்றதால் பலனற்றவை 
கடல்நீரையும் 
கருமியின் செல்வத்தையும் போல.

செயற்கரியவை ஓசையற்றவை
சூரியனையும் நிலவையும்போல.

பொறுமையானவை நிரந்தரமானவை
மலையையும் மண்ணையும் போல.

சீற்றம் மிக்கவை 
அழிவு நிறைந்தவை
நெருப்பையும் நீரையும் போல.

பற்றுதலுக்கு அலைபவை 
நிலையில்லாதவை 
மேகங்களையும் வாழ்க்கையையும் போல.

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...