28.11.10

நாளைக்கு வாழ்கிறேன்



I
படபடக்கும் நாட்காட்டியின் இடையே
உறைந்தும்-
உறைந்த கடிகாரத்தின் வட்டத்துக்குள்
துரத்தப்பட்டபடியும்
கழிகிறது காலம்.

II
நேற்றுப் போல் இன்று இல்லை
அவனுக்கு.
இன்று போல் நாளை இராது
இவனுக்கு.
நேற்றிலும் இன்றிலும்
வாழ்கிறார்கள்
அவனும் இவனும்.
நாளைக்கு
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நான்.

III

விழித்திருக்கையில்
காலத்தை நாம் கவனிக்கிறோம்.
உறங்குகையில் நம்மைக்
கவனிக்கிறது காலம்.

8 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

இந்த வினாடி உங்க கவிதைகளில் இலயித்திருக்கிறது என் மனசு.

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

முதல் கவிதை மிக அழகு

மிருணா சொன்னது…

நேரம் என்பது மனக்கணக்கோ பல நேரம்?

ரிஷபன் சொன்னது…

//விழித்திருக்கையில் காலத்தை நாம் கவனிக்கிறோம். உறங்குகையில் நம்மைக் கவனிக்கிறது காலம்.//

ஆஹா.. மூன்றுமே காலக் கவிதைகள்.. மூன்றாவது என்னைக் கவனித்து விட்டது முன்னதாக.

santhanakrishnan சொன்னது…

நாளைக்கு வாழ்கிறேனென்பது ஒரு
புது விஷயம்.
உறங்கும் போதும் நம்மை கவனிக்கிறது
காலம்.

ஹேமா சொன்னது…

காலம்...சொல்லிக்கொண்டிருக்கொண்டிருக்கும்போதே கழிகிறது காலத்தின் ஒரு நொடி !

பத்மா சொன்னது…

காலம் என்ன ஒரு subject ! ...சில சமயம் திரும்பாதா எனவும் சில சமயம் ஓடாதா எனவும் ஏங்க வைக்கும்.
காலம் பற்றி காலத்தால் அழியாத கவிதைகள் .

சிவகுமாரன் சொன்னது…

விழித்திருக்கையில்
காலத்தை
நாம் கவனிக்கிறோம்.
உறங்குகையில்
நம்மைக்
கவனிக்கிறது
காலம்.
.......Super:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...