3.1.12

வெண்பன்றி எழுப்பிய கோயில்

ராசிபுரம் போயிருந்தேன். ஆனால் கல்வெட்டுக்கள் ராஜபுரம் என்று சொல்கின்றன. அற்புதமான புராதன சிவாலயம் என்னை அழைத்தது. உள்ளே செல்லும்போது உச்சிக்கால பூஜைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. 

கைலாசநாதரையும் அம்மையையும் வணங்கிவிட்டு வெளிப்ப்ரஹாரத்தில் அமைந்திருந்த காலபைரவர்-தக்ஷிணாமூர்த்தி-சண்டிகேச்வரர் சன்னதிகளை வணங்கித் திரும்பும் போது பிரகாரத்திலுள்ள வன்னி மரத்தின் அடியில் வில்அம்பு மற்றும் இடுப்பில் கத்தியுடன் நின்ற கோலத்தில் வணங்கியபடி-கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான- வல்வில் ஓரியின் சிலை அமைந்திருக்க, தொன்மங்களைத் தேடியலையும் என் பசி பெருகியது.

வல்வில் ஓரி கொல்லிமலையைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான்வில் வித்தையில் வீரனான ஓரி சிறந்த சிவபக்தன்ஒரு சமயம் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தபோது வனத்தில் நீண்டநேரமாகத் தேடியும் ஒரு மிருகம்கூட கண்ணில் அகப்படவில்லை.

களைத்துப்போன ஓரி ஓரிடத்தில் வெண்பன்றி ஒன்று செல்வதைக் கண்டான்உடனே குறி பார்த்து பன்றி மீது அம்பை எய்தான்அம்பினால் தாக்கப்பட்ட பன்றிஅங்கிருந்து நீண்டதூரம் ஓடி ஒரு புதருக்குள் மறைந்து கொண்டது. பன்றியைப் பின்தொட்ர்ந்த மன்னன் புதரை விலக்கியபோது அங்கே ஒரு சுயம்புலிங்கத்தைக் கண்டான்.

லிங்கத்தின் நெற்றியில் தான் எய்த அம்பு தாக்கி ரத்தம் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டு கலங்கிய ஓரி தன் தவறை உணர்ந்து சிவபெருமானை வணங்கினான்சிவபெருமானும் அவனுக்குத் தன் சுயரூபம் காட்டித் தானே பன்றியாக வந்ததை உணர்வித்தார்அதன்பின் ஓரி இவ்விடத்தில் கோயில் எழுப்பினான்.

ஓரியின் விலவன்மை புறநானூற்றில் புகழ்ந்து பாடப்பட்டிருக்கிறது. அப்பாடல் குறிக்கும் வில்வன்மை கோயில் கோபுரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்த உடனேயே கோபுரத்தின் பின்புறத்தில் ஒரே அம்பால் ஐந்து மிருகங்களைக் கொன்ற காட்சியைக் காணும் போது இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னே நகர முடிகிறது. 

கைலாசநாதர் மூலஸ்தானத்தில் சுயம்புலிங்கமாக காட்சி தர இப்போதும் இவரது திருமேனியில் அம்பு பட்ட தழும்பு இருக்கிறதுசிவராத்திரியின்போது இறைவனுக்கு கால பூஜைகள்தான் நடக்கும். ஆனால் இத் தலத்தில் ஆறு கால பூஜைகள் செய்யப் படுகின்றன

அம்பாள் அறம்வளர்த்தநாயகி தனி சன்னதியில் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறாள்இவளது சன்னதியில் பௌர்ணமியன்று காலையில் விசேஷ ஹோமம் நடக்கிறதுஇவளுக்கு முன்புறம் மகாமேரு உள்ளது

ப்ரஹார வலத்தைத் துவங்கும்போது முதலில் காசி விஸ்வநாதர்விசாலாட்சி அம்பாள் சன்னதியும்பிரகாரத்தின் முடிவில் ராமேஸ்வரர்,பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியும் அமைக்கப்பட்டிருக்கிறது.

நெல்லி ஸ்தல விருட்சம்கோபுரத்திற்கு கீழே உள்ள விநாயகர்எதிரே நந்தியுடன் காட்சி தருவது தனிச்சிறப்பு. இவரை வணங்கிவிட்டே கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம் துர்க்கையின் சன்னதியில் அம்மனுக்கு ஆடிக் கடைசி வெள்ளியின்போது சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

இங்குள்ள ராஜகோபுரம் நிலைகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறதுவிஸ்வநாதர் சன்னதி விமானம்காசியைப் போன்றே அமைக்கப்பட்டிருக்கிறதுப்ரஹாரத்தில் கடைந்தெடுக்கப்பட்ட தூண்களில் சிற்ப அழகும் இசையொலி எழுப்பும் குடைவு வேலைப்பாடுடைய தன்மையும் நம்மை பிரமிக்க வைக்கிறது. 

அம்பாள் சன்னதி அருகில் முருகன் பால தண்டாயுதபாணியாகவும்வள்ளிதெய்வானையுடன் கல்யாண சுப்ரமண்யராகவும் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகிறார்இவ்வாறு ஒரே சமயத்தில் முருகனின் இரண்டு கோலங்களையும் இங்கு காணலாம்அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகனுக்கு மாசிமகத்தன்று சிறப்பு பூஜை நடக்கிறது.

ப்ரஹாரத்தில் இருக்கும் கங்கை தீர்த்தத்தின் மூலம் யாருக்கும் தெரியாத தானாய்த் தோன்றிய அபூர்வம்சிவஅம்சமான வீரபத்திரருக்கும் சன்னதி இருக்கிறதுஇவருக்கு எதிரே நந்தி உள்ளதுஅருகில் ஒரே கல்லில் செய்யப்பட்ட சகடவிநாயகர் கையில் ருத்ராட்ச மாலையுடன் பார்க்க அத்தனை அழகு.
தக்ஷிணாமூர்த்திக்கென்று தனியே உற்சவர் இருக்கிறார்.இவரது பீடத்திலேயே நான்கு சீடர்களும் இருக்கின்றனர்ஒவ்வொரு மாதமும் முதல் வியாழனன்று இவர், தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு எழுந்தருளுகிறார்.  காலபைரவர்சனீஸ்வரருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளனகார்த்திகை முதல் நாளில் பைரவருக்கு, “ஏகாதச ருத்ரபாராயணம்” நடக்கிறது. 63நாயன்மார்களுக்கும் குருபூஜை உண்டுநாகர் சன்னதியும் உள்ளது

ஆடிப்பெருக்கன்று வல்வில் ஓரிக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ பூஜைகளும் செய்யப்படுகின்றனகோயில் கட்டிய மன்னருக்காக இவ்வாறு விசேஷ வழிபாடு நடத்தப்படுவது சிறப்புசித்திரையில் பிரம்மோத்ஸவம்வைகாசி விசாகம்,தைப்பூசம்மாசிமகம்பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் திருவிழாக்கள் நடக்கின்றன.  
இத் தகவல்களையெல்லாம் சேகரித்து முடித்த பின் ஓரி நடமாடிய இடத்தின் காலத்தின் சுவடுகளைத் தேடியபடியே மூடப்பட இருந்த நுழைவாயில் கதவுகளைத் துறந்து வெளியேறினேன்.
என்ன எங்கே எப்படி எனும் கேள்விகளை எழுப்புபவர்களுக்காக இந்தக் கடைசிப் பத்தி.
காலை மணி-12 மணி வரைமாலை 4.30மணி-இரவு 8.30 மணி வரை திறந்திருக்கிறது நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.

3 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

ராசிபுரத்தில் தனியார் பள்ளிகள் பிரசித்தம் என்பது தான் எனக்குத் தெரியும் . சிவாலயங்களைத் தேடியலையும் எனக்கு இந்த ஆலயம் புதிது.

பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

""தொன்மங்களைத் தேடியலையும் என் பசி பெருகியது""

இந்த பசிதானே எங்களுக்கு பல தகவல்களை அள்ளித்தருகிறது அண்ணா.

ரிஷபன் சொன்னது…

தரிசனம் உங்கள் வார்த்தைகளில் கிட்டியது

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...