4.12.13

திரு.க்ரேஸி மோகனுடன் “அகம் விரும்புதே புறம்”.


கடந்த மே மாதம் புறநானூறின் பாடல்களுக்கு, இன்றைய மொழியில் ஒரு கவிதையும், அதற்குப் பொருத்தமாக ஒரு வெண்பாவும் செய்யலாம் என நானும், திரு. க்ரேஸி மோகனும் கை கோர்த்தோம். 

கவிதையை நானும், வெண்பாவை அவரும் எழுத, ஐந்து பாடல்கள் முடித்தபின், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க நிர்பந்திக்கப்பட்டோம்.

இப்போது அதைத் தூசி தட்டி, நாளை முதல் மீண்டும் துவங்கலாம் என்று ஓர் ஆவல். அண்ணாவும் சற்றைக்கு முன் ஒப்புதல் தந்தார். அவருக்கு என் தனிப்பட்ட நன்றி.

எவ்வளவு தூரம் பயணிக்க இறைவன் சித்தம் துணை வருமோ, அது வரை இந்தப் பயணம் செல்லும்.

உங்களுடன் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

வாரத்துக்கு இரு பாடல்களாக வெளியிடலாம் என எண்ணுகிறேன்.


உங்கள் ஆதரவையும், ஆசிகளையும் கோருகிறேன்.

அன்புடன்,
சுந்தர்ஜி ப்ரகாஷ்.

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...