3.11.10

இன்றிரவு


காற்றின் பக்கங்களில்
எழுதப்படுகிறது
இசைக்கப்படாத சங்கீதம்.

மனதின் சுவர்களில்
விசிறியடிக்கப்படுகிறது
வரையப்படாத ஓவியம்.

மண் தொடும்வரை
வெளியில் தவிக்கிறது
மழையின் துளி.

நீரின் சலனங்களில்
பரவுகிறது
தொடுதலின் நாணம்.

மெல்லத் திறக்கிறது
நம்மிருவருக்கான
கதவும் இரவும்.

6 கருத்துகள்:

பத்மா சொன்னது…

wowowowowow

vasan சொன்னது…

/மண் தொடும்வரை
வெளியில் தவிக்கிறது
மழையின் துளி.
நீரின் சலனங்களில்
பரவுகிறது
தொடுதலின் நாணம்.
மெல்லத் திறக்கிறது
நம்மிருவருக்கான
கதவும் இரவும்./
ஒவ்வொரு வ‌ரியும் அற்புத‌ம். 'த‌விக்கும் துளி, 'நாணும்(அலையும்)நீர்'
மெல்ல‌திறக்கிறது காத‌லும் க‌த‌வும்?

ஹ ர ணி சொன்னது…

மனதின் சுவர்களில் விசிறியடிக்கப்படுகிறத
வரையப்படாத ஓவியம்...நளினம்..மென்மை..
அற்புதம் இந்த சொற்டொடரும் பொருண்மையும்..

Vel Kannan சொன்னது…

மெல்லத் திறக்கிறதுநம்மிருவருக்கான கதவும் இரவும்//
ம்... சொல்ல நினைத்ததை எளிய வரிகளில் .... யோசிக்கிறேன் ஜி

ரிஷபன் சொன்னது…

ஆஹா..
மனதின் சுவர்களில் வரையப் படாத ஓவியம்..
மிகவும் ரசித்தேன்

சுந்தர்ஜி சொன்னது…

6 w,5 oவுக்கும் 1 w,1o பத்மா.

நன்றி வாசன்.

நளினமான மனதுக்கு நன்றி ஹரணி.

யோசித்து ஒரு கவிதை குடுங்க வேல் கண்ணன்.என்ன வேலை ரொம்ப அதிகமோ?ஆளையே காணோம்.

உங்க ஆஹாவுக்கு ஒரு ஓஹோ ரிஷபன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...