13.11.10

மறுமொழி


மழிக்காத மகனுக்கொன்று
நேரம் தாண்டியுறங்கும்
மகளுக்கொன்று.
சாப்பிடாத பிள்ளைக்கும்
விடுப்பெடுத்த வேலையாளுக்கும்
மற்றொன்று.
அழைப்பு மணிக்கொன்றும்
தொலைக்காட்சிக்கு வேறொன்றும்.
தொலைபேசிக்கொன்று.
விடைபெறலுக்கொன்று.
பின் திரும்பும்
வாகனத்திற்கொன்று.
நாய்களுக்குத் தனியாய் ஒன்று.
கோயிலுக்கு நேர்ந்தவளுக்கும்
யாசிக்கும் தொழுநோயாளிக்கும்
நிச்சயம் வேறு வேறு.
கவனிப்பாரின்றிக் கரையும்
காக்கைக்கும்
தோட்டத்துக் குயிலுக்கும்
தனித்தனியே.
வீடுகளின் முகமாய்
மூடப்பட்ட கதவுகளும்
அவற்றின் உயிராய்க்
குரல்களும் ஓசைகளும்.

8 கருத்துகள்:

ஹ ர ணி சொன்னது…

சுந்தர்ஜி..

இவற்றுக்கிடையே நமது முகத்திற்கான முகத்தை மீட்டெடுக்கவேண்டும்..நிதமுமாய்..வெகு அற்புதம்.

ரிஷபன் சொன்னது…

இவற்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ நமது நிஜ முகம்! அதை எல்லா இடங்களிலும் வைத்திருக்கும் பாக்கியம் சிலருக்கு இருக்கிறது..

நிலாமகள் சொன்னது…

நம் ஒவ்வொருவருக்கும் மொழியின் வீச்சும், பயனாகும் இடத்திற்கேற்ற தொனி மாறுபாடுகளும் எண்ணிப்பார்க்க விந்தையாய் தானிருக்கிறது ஜி. பட்டியலின் பாங்கு வியப்பு!!

santhanakrishnan சொன்னது…

ஒரே நதியில் உருளும்
வெவ்வேறு கூழாங்கற்கள்.

ஹேமா சொன்னது…

ம்...உண்மைதான் சுந்தர்ஜி.எத்தனை பாவங்கள்தான் இந்தக் குரலில் !

என்றென்றும் உங்கள் எல்லென்... சொன்னது…

எண்ணிலடங்கா எத்தனையோ முகங்களுடன் உலா வருகிறோம்....

மிருணா சொன்னது…

நாம் பல தன்னிலைகளாக இருக்கிறோம் என்ற அறிவியலை கவிதையாகப் படித்தேன்.Fine!

vasan சொன்னது…

/வீடுகளின் முகமாய் மூடப்பட்ட கதவுகளும் அவற்றின் உயிராய்க்குரல்களும் ஓசைகளும்./
அஃறிணையை உய‌ர்திணையாக்கிய‌ க‌விதை.
நீரை, ப‌னியாய், மாம‌ழையாய், சார‌லாய், ந‌தியாய், அருவியாய், குளமாய், குட்டைடாய், வாய்காலாய், க‌ட‌லாய், மேக‌மாய் அவ‌தானிக்கும் அற்புத‌ம் இக்க‌விதை வீட்டின் ஊடாய்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...