31.12.13

மூன்று நிலைகள்


1.
எழுதுகிறதாய்ச்
சொல்லப் படுபவனுக்கும்-
நன்றாக எழுதியவனுக்கும்
ஒன்றும் பெரிய வித்யாசமில்லை.

அதிக பட்சம்
நடுத்தெருவில்
பறவைகளின் எச்சத்தையும்,
வருடத்துக்கு இருமுறை
ஓர் எழுத்தைக் கூட
அறியாதவன் சூட்டும்
மாலையையும்
சிலையாய்ச் 
சுமக்க வாய்க்கலாம்
நன்றாக எழுதியதாய்
அறியப்பட்டவன்.

2.
பனியாய்
இருக்கையில் 
காற்றாய்;
மெழுகாய் 
இருக்கையில்
நெருப்பாய்.
எப்படியாய் இருந்தாலும்
உருகுதல் என் நிலை.
எப்படியாய் இருந்தாலும்
உருக்குதல் உன் நிலை.


3.
நானும் நீயும்
கவிஞர்கள்.

ஆதலால்
நானும் நீயும்
கவிதைகள்
எழுதும்படியாயிற்று.

ஒரே வித்தியாசம்
காலத்தில்தான்.

நீ நேற்றைக்காய்
எழுதுகிறாய்.
நான் நாளைக்காய்
எழுதுகிறேன்.

1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

புரியறாப்புலயும் இருக்கு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...