23.6.11

மயில்குட்டி


























மயிலிறகை
புத்தகத்தில்
உறங்க வைத்து
அரிசி போட்டு
மறுநாள்
குட்டி
போட்டிருக்காவெனப்
பார்த்து
மயிலிறகோடு
வளர்ந்த
பிள்ளைகளில்
நானும் ஒருவன்.

ஒருவேளை
நேற்று வரை
அதற்குத்
தினமும்
அரிசி போட்டு
புத்தகத்தின்
மயிலிறகைத்
திறந்து
இன்று
பார்த்திருப்பேனானால்
குட்டி போட்டிருக்கக்
கூடும்.

11 கருத்துகள்:

guna thamizh சொன்னது…

;)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மயில்குட்டி... நல்ல கவிதை... மயிலிறகுக்கு அரிசி போட்டு “குட்டி போட்டுடுச்சா..” என தினமும் பார்ப்பதில் எவ்வளவு ஆர்வம் சிறு வயதில்... அதை அப்படியே நினைவு படுத்தியது உங்கள் கவிதை....

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அறியாமை அகன்றதாலும்
புத்தி புரிந்ததாலும்
நாம்
இனிமையை
இளமையை
நம்பிக்கையை
எவ்வாறு
இழந்திருக்கிறோம் என
மின்னலாய்
சொல்லி சென்ற
கவிதை அருமையிலும்
அருமை.

G.M Balasubramaniam சொன்னது…

மயிலிறகு குட்டி போட்டிருந்தாலும் போட்டிருக்கக் கூடும். வயதாக ஆக, இளவயது நம்பிக்கைகள் காணாமல் போகாமல் இருந்திருந்தால்.....ஓ. அது அந்தக் காலம். !

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நீங்கள் சொல்லுவது உண்மையே.

அன்று சிறுவர்களாகிய நமக்கு
நல்லதொரு நம்பிக்கை இருந்தது. அதனால் மயிலிறகு குட்டி போட்டுள்ளதாக நம்பி/நினைத்து மகிழ்ந்தோம்.

இன்று நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லாமல் போனது.

அதனால் மயிலிறகைப்புத்தகத்தில் வைக்கவும் அதுக்கு அரிசிபோடவும் அது குட்டிபோடும் என்ற நம்பிக்கையை இழந்து அதுபோலச்செய்யவில்லை.

நம்பிக்கை என்றும் வீண் போகாது என்பதை நம்பிக்கையுடன் அழகாகச் சொன்னக்கவிதை. பாராட்டுக்கள்.

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.

நிலாமகள் சொன்னது…

நாங்க‌ளெல்லாம் தென்னைம‌ர‌த்தின் ப‌ச்சை ம‌ட்டையில் அடிப்ப‌குதியை சுர‌ண்டி ம‌யிலிர‌குக்கு தீனியாக‌ப் போட்ட‌துண்டு. குட்டி போட‌வில்லையானால் ந‌ம் கைக்குற்ற‌மாக‌க் க‌ருதி வேறு ந‌ம்மொத்த‌ நிபுண‌ர்க‌ளை(!) ஆலோசித்து மாற்று வ‌ழி க‌ண்டுபிடிப்போமே ஒழிய‌ ந‌ம்பிக்கையை இழ‌ந்த‌தில்லை. குழ‌ந்தைமை நிறைந்த‌ குதூக‌ல‌ நாட்க‌ள‌வை...! எல்லோரையும் கால‌ய‌ந்திர‌த்தில் ஏற்றி அந்த‌ நினைவுக‌ளை மீட்டெடுத்த‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி ஜி!

ஹேமா சொன்னது…

நானும்தான் மயிலிறகு வளர்த்திருக்கிறேன்.ஒவ்வொரு நாளும் புத்தகம் திறந்து அடிக்கடி பார்த்தால் குட்டி போடாது என்றும் பயம் காட்டுவார்கள் !

மிருணா சொன்னது…

மிக மிக மிக அருமை. நம்பிக்கை அழகாக ஒளிந்திருக்கும் வரிகள்.

raji சொன்னது…

உண்மையில் நம் நம்பிக்கைதான் குட்டி போடவேயில்லை

rajasundararajan சொன்னது…

பாரதிக்குமார் 'மயில்குட்டி' என்றொரு பதிவு இட்டிருந்தார்.

http://bharathikumar.blogspot.com/2011/06/blog-post.html

அதைப்பற்றித்தானோ உங்கள் பதிவும் என்று இங்கே வந்தேன், ஆனால் இது வேறு.

அருள்கூர்ந்து அதையும் வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...