
எங்கு சங்கீதம்
நிம்மதியின் பள்ளங்களை
நிரப்பத் தவறியதோ
அங்கு ஒருபோதும்
காற்று வீசாதிருக்கட்டும்.
எந்த வனத்தில்
பறவையின் கூவல்கள்
தேய்ந்து நிர்மூலமாகியதோ
அங்கு சூரியன்
நிரந்தரமாய்
உதிக்காதிருக்கட்டும்.
எந்த போதனையின்
படிக்கட்டுக்கள்
அறியாமையின் வாயிலில்
கொண்டு சேர்க்கிறதோ
அந்த வாயில்களில்
புகுந்துவனவிலங்குகள்
ஓலமிடட்டும்.
எந்தத் தேவாலயங்களின்
சுவர்கள் பேராசையால்
கட்டப் படுகிறதோ
அவற்றின் கூரை
மூடப்பட முடியாது அழியட்டும்.
எந்தக் கவிதையின் மொழி
கூரற்ற வாளிடம்
தோற்றுத் தலைகுனிகிறதோ-
அந்த மொழி
சுருண்டு தொங்கும்
கழிவறைக் காகிதமாய்
மாறட்டும்.
எந்தக் கள்வர்கள்
வியர்வையின் பொற்காசுகளைத்
திருடத் துணிவரோ
அவர்கள் நிரந்தரமாகப்
பசியறியாதிருக்கட்டும்.
11 கருத்துகள்:
மகரின் மகரின் திருமண நிகழ்வால் கல்லூரிகளில் பரீட்சை ரத்து. இரண்டு நாட்களுக்கு சாதாரண மக்களால் அந்த வழித்தடத்தில் போக முடியாது. பெருமூச்சுக்குப் பதில் உங்கள் கவிதையை படித்துக் கொண்டேன். நன்றி.
மிக அருமையான கவிதை. கோபத்தின் ஆழத்தில் மூழ்கி சாபத்தின் விளிம்பில் எழுந்திருக்கிறது. உண்மையை கொதிக்க கொதிக்க பேசியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போல நல்ல பதிவுகள் இடுங்கள்.
# எந்த போதனையின்
படிக்கட்டுக்கள்
அறியாமையின் வாசலில்
கொண்டு சேர்க்கிறதோ
அந்த வாயில்களில்
புகுந்து
வனவிலங்குகள்
ஓலமிடட்டும்.
எந்தத் தேவாலயங்களின்
சுவர்கள் பேராசையால்
கட்டப் படுகிறதோ
அவற்றின் கூரை
மூடப்பட முடியாது அழியட்டும்.
# வியர்வையின் பொற்காசுகளைத்
திருடத் துணிவரோ
அவர்கள் நிரந்தரமாகப்
பசியறியாதிருக்கட்டும்.
மிக அற்புதமான வரிகள். நல்ல சொல்லாடல்.
உங்கள் கவிதை மொழியின் கூர்மை கண்டு வழக்கம் போல் வியந்து நிற்கிறேன் ஜி!
இது நல்லாயிருக்கே ... பசியறியாதிருத்தல்... இதைவிட பெரும் தண்டனை உண்டா... ஐயோ பாவம் அவன்.
தமிழ் மொழிக்கு மாத்திரம் சாபம் வேண்டாம் சுந்தர்ஜி !
அறம் பாடும் கவிஞன் நீங்கள்.
சாபம் தவிர்த்து வரமளிக்கும்
கற்பக மரம் வளரட்டும் தளத்தில்.
உங்கள் வரிகள் இருளிலும் ஒளிரும்
வைரங்கள் சுந்தர்ஜி.
//கள்வர்கள் வியர்வையின் பொற்காசுகளைத்திருடத் துணிவரோஅவர்கள் நிரந்தரமாகப் பசியறியாதிருக்கட்டும்//
எழுத்தின் சாபங்கள் பலிக்கும் காலம்..உலகம் உய்யும்
அந்த யானை படம் மிக அருமை. அப்படியே கடத்தி கொண்டு போய் விடலாமென்று நினைக்கிறேன்.
ஆமென்
//எந்தக் கள்வர்கள்
வியர்வையின் பொற்காசுகளைத்
திருடத் துணிவரோ
அவர்கள் நிரந்தரமாகப்
பசியறியாதிருக்கட்டும்.//
பசியழியாதிருக்கட்டும் என்று இருக்க வேண்டுமோ சுந்தர்ஜி.? இந்த வரிகள் செய்த பிரமாணங்களை நினைவு படுத்தட்டும்.!!!!!!!..
எறும்பு பகிரும் வெல்லக்கட்டி
தீவிர வாசகி என சொல்லிக்கொள்ள முடியாத என்னைப்பார்த்து ஒரு தொடர் சங்கிலியின் கண்ணியைத்தந்துவிட்டார் கீதமஞ்சரியின் கீதா.
சிலர் கவனம் ஈர்த்துவிட்டோம் என்பது மகிழ்ச்சிதான் என்றாலும் ,
கவனமாக சுடர் காக்க வேண்டிய பொறுப்பு திடீரென வந்து மனத்தைக்
குடைகிறது .!
நாமே வைத்துக் கொண்டுவிட்டால் எப்படி ....ஒன்றை ஐந்தாக்கி
அடையாளம் காட்டி வணங்க வேண்டிய பொறுப்பு வேறு..!
அம்மா வெளியில் போக ,வீட்டுப் பொறுப்பைப்பார்க்கும்
பதின்வயதுச் சிறுமி போல் உணர்ந்தேன் .கொஞ்சம் பெருமை...கொஞ்சம்
பதட்டம்...
பிடித்த பதிவர் சிலரை இந்த இருநூறு என்ற எல்லைக்கோடு
தவிர்க்கவைத்தது.அதே கோடுதான் பெருந்தலைகளை சேர்க்கும்
வாய்ப்பையும் தந்தது.
பிடித்த வலைப்பூக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் லீப்ச்ட்டர்
விருதினைப் பெற்ற மகிழ்வோடு வழங்கி மகிழ்கிறேன்
பாரதி கிருஷ்ணகுமாரின் உண்மை புதிதன்று -
எலி சிங்கத்துக்கு மகுடம் சூட்ட முனைவதுபோல் இருக்கிறதா?...
இருக்கட்டுமே....வலைப்பூவின் உறுப்பினர் எண்ணிக்கையால்
எலிக்கு யோகம்..!
சுந்தர்ஜி -பரிவின் இசை
இவருக்கு இரண்டு அப்பம் தரவேண்டும்.கைகள் அள்ளிய நீர் ,பரிவின் இசை -இரண்டுமே என் மனங்கவர்ந்தவை.படித்துத் தெரிந்து கொள்ளவும் முடியும்.படித்து உணர்ந்து கொள்ளவும் முடியும்...
ஹ ர ணி -ஹரணிபக்கங்கள்
கையளவு கற்க ஆசை ,கடுகளவு கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்
என்று ஒரு வரியைப் போட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்!
இவர்கள் கற்றது கடுகென்றால்... நீ நீ நீ ? என அன்றாடம் மணி
அடிக்கிறது!
ப.தியாகு-வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை
என் பெயர் இது எனத் தோன்ற வைத்தது வலைப்பூவின் பெயரே...போதிமரம்
என்றொரு கவிதை நான் போகவேண்டிய தூரம் சொன்னது
குமரி.எஸ்.நீலகண்டன்-நீலகண்டனின் எழுத்துக்கள்
என் துறை சார்ந்த முன்னோடி.எழுதுகிறார் என்பது தெரியுமே தவிர
எழுத்தினைப் பதிவுலகம் வந்தபிதான் அறிந்தேன்...
நிலாக்கவிதைகளின் ரசிகையானேன் ...
அம்மா ஒரு வெல்லக்கட்டி வைத்துப்போனாள்
எறும்பு குழந்தைகளுக்குப் பங்கிட்டது..
குழந்தைகள் சுவைப்பார்கள்....
அம்மாவும் கூட
காத்திருக்கிறது சிற்றெறும்பு.... ..
Today is virtuous poorly, isn't it?
கருத்துரையிடுக