23.2.12

வாலுடன் நடக்கும் மீன்



எப்போதெல்லாம்
நீந்தமுடியவில்லையோ
அப்போதெல்லாம்
நடக்கும்.

எப்போதெல்லாம்
நடக்கமுடியவில்லையோ
அப்போதெல்லாம்
பறக்கும்

எப்போதெல்லாம்
எதுவும் முடியவில்லையோ
அப்போதெல்லாம
மகளின் கைக்ளுக்குள்
நுழைந்து

ஓய்வெடுத்துக்
கொண்டிருப்பதாக
அறிவுறுத்தப்பட்டு
ஓவியத்தில் தலைகீழாகத்
தொங்கும்

விதிகளை மாற்றி
வரையப் பட்ட
அந்தப் பரிதாப மீன்.

3 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

குழந்தைகளின் கற்பனைகள் அளவேயில்லாத அற்புதம் !

கீதமஞ்சரி சொன்னது…

பரிதாப மீனல்ல. படைப்பாளியின் பெருக்கெடுக்கும் பாசத்தில் நீந்தி ஓய்ந்த மீன் அது. நீந்திக் களைக்கும் துடுப்பின் வலிபோக்கும் யுத்தியை தன் தூரிகை வழி புகுத்திப் பராமரிக்கும் தேவதை அவள்.

சக்தி சொன்னது…

விதிகள் ,மீறல்கள், எல்லாம் நுழையாத பருவத்தை அனுபவிக்கும் மகளே
வாழ்க...!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...