16.2.12

மொழியின் வேலி


அவரவரின்
மொழியில்
உருப்பெறுகிறது
கவிதை.

சிலருக்குக்
கோர்க்கப்பட்ட
எழுத்துக்களின்
பள்ள்ங்களில்
பருகக் காத்திருக்கிறது
கவிதையின் லாகிரி.

வடிவமைக்கும்
சவப்பெட்டியிலேயோ
ஆடைகளின் 
பின்னல்களிலேயோ
பிறருக்கு.

அசையும் காற்றின்
வெவ்வேறு
கோர்வைகளில்
உயிருறுகிறது இசை.

உனக்கு
வாய்க்கிறது
கடவுளின் சங்கீதம்.

எனக்குக்
கீரைவிற்பவளின் குரலாகவோ.
வானொலி அறிவிப்பாளனின்
விடாத பேச்சாகவோ.

அதிர்வின் 
ஒவ்வொரு ஜதியிலும்
வடிவுறுகிறது நடனம்.

அவளுக்கு
அடவிலும் முத்திரையிலும்.

இவனுக்கு
சாலைக்காவலனின்
லாவகத்திலேயோ.
சாணைக்காரனின்
கூரேற்றும் இயக்கத்திலேயோ.

அவரவரின்
மொழி அவரவர்க்கு.

அவரவரின் வேலியும்.

13 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

எங்கள் அளவுகளை நாங்களே சரிசெய்துகொள்கிறோம்.

சைக்கிள் சொன்னது…

அமைதியான, நிதானமான கவனிப்பை, நிலைகளைப் பேசும் கவிதை. நன்றி.

இரசிகை சொன்னது…

m........avaravarin paarvai avaravarkku..!!

vaazhthukal sundarji...:)

பத்மா சொன்னது…

எல்லாவற்றிலும் இசையையும் கவிதையையும் தேடும் ஒருவனால் தான் அவரவர்க்கு அது என கூறவும் இயலும் ..

எங்கும் எதிலும் கலை
அது காணும், சுக நிலை

நிலா மகள் சொன்னது…

//அவரவரின்
மொழி அவரவர்க்கு.
அவரவரின் வேலியும்//

அழகா சொல்லிட்டீங்க ஜி! உங்களிடம் கற்கவும், சரிசெய்துகொள்ளவும் நிறைய இருக்கு எங்களுக்கு.

Madumitha சொன்னது…

வேலி தாண்டும் மொழி
உங்களுடையது சுந்தர்ஜி.
கடவுள் கீரை விற்பவளின்
குரலாயும் வெளிப்படலாம்.

G.M Balasubramaniam சொன்னது…

உங்கள் கவிதைக்கு வேலி உண்டா என்ன.? சுந்தர்ஜி உங்கள் பழைய பதிவுகளில் ஒரு ரௌண்ட் போய் வந்தால் தெரிகிறது, எத்தனை எத்தனை தலைப்புகள் , என்னென்ன உணர்வுகள். சிம்ப்லி குட். !

ரிஷபன் சொன்னது…

அவரவரின்
மொழி அவரவர்க்கு.


அவரவரின் வேலியும்.

Classic

கமலேஷ் சொன்னது…

எல்லாத்தையும் கவிதையாகிறீங்க சுந்தர் நீங்க...நிச்சயம் இது வரம்தான்.

வேல்கண்ணன் சொன்னது…

அடடா ... நீங்கள் சொல்லும் இந்த கவிதையை நடையிலும் ஒரு தனி மொழி தெரிகிறது ஜி

கீதமஞ்சரி சொன்னது…

கவிதையின் மொழி பற்றிச் சிலாகிக்கும் கவிதைமொழியில் ரசித்துக் குளிர்ந்தேன். என் கவிதை மொழி என்னவாயிருக்குமென்ற யோசனை இப்போது என் மொழியின் வேலிக்குள் சுழன்றுகொண்டிருக்கிறது.

மிக அழகான மொழிபேசும் கவிதைக்கு நன்றி.

சக்தி சொன்னது…

அவரவரின்
மொழி அவரவர்க்கு.


அவரவரின் வேலியும்

கமலேஷ் சொன்னது…

- இது மீள் பதிவு -
என்றாலும் அதே வெளிச்சம்.
இருக்கும் தானே ,
சுடரில் என்ன
பழசு, புதுசு....

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...