2.8.13

மந்திரத்தில் தோய்ந்த மலர்கள்

இன்றையப் பதிவில் நாம் வாசிக்க இருப்பது மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்வீகமாக நிறைக்கும் மந்திர புஷ்பங்களைப் பற்றித்தான்.

யஜுர் வேதத்தைச் சார்ந்த தைத்ரீய ஆரண்யகம் (1.22) இந்த மந்திர புஷ்பத்தைக் கொண்டிருக்கிறது.   

மந்திரமெனும் தேனில் தோய்ந்த இம்மலர்களின் பொருளை அறியும் போது, நம் ப்ரார்த்தனைகளின் தொன்மை கவித்வமான அழகும், பொருளும் கொண்டதாகவும், இயற்கையை வணங்கி, அதனுடன் இணைந்து அதன் மடியில் தவழ்வதாகவும் இருக்கிறது.

“ நிலவே நீரின் மலர்” என்று முதலாம் ச்லோகத்தில் துவங்கும் வசீகரம் கிளர்த்துகிறது; கவிதையின் வேர் கிளை பரப்பி, ப்ரார்த்தனையாக வடிவெடுத்து மயக்கும் மாயம்; 

மீண்டும் மீண்டும் இயற்கையின் ஆதாரங்களான நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகம், மழைக்காலம் என்று சுழன்று, நீருடன் ஒவ்வொன்றும் ஆதாரம்; ஆனால் நீரே இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்று உறுதியாய்ச் சொல்லி முடிக்கிறது.

ஒன்பதாவது ச்லோகத்தில், ஓடத்தால் கடக்க அறிவுறுத்தும் கட்டத்தின் மூலம் அந்த இயற்கையை வணங்கி அதன் அடுத்த தளமான இவை அத்தனையையும் உருவாக்கிக் காக்கும் இறையை அடையும் முயற்சிக்கு ஆதி மனிதனைக் கொண்டு செல்கிறது.

செல்வத்துக்கு அதிபதியான குபேரனை வணங்கும் பத்தாவது ச்லோகத்துடன் மந்திர புஷ்பம் எனும் நறுமணம் வீசும் மலர்கள் இறைவனின் பாதங்களில் சேர்க்கப்படுகின்றன.   
இனி மந்திர புஷ்பத்தின் அந்த 10 ச்லோகங்கள்.

மந்திர புஷ்பம்

”ஓம் பத்ரம் கர்ணேபி” எனும் சாந்தி பாடத்துடன் துவங்குகிறது மந்திர புஷ்பம்.       (சாந்தி பாடம் குறித்த பதிவு அடுத்த சில நாட்களில் எழுதுகிறேன்)

ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத  (1)

யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோஅவன் மலர்களை உடையவனாகமிருகங்களை உடையவனாகசந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாகமிருகங்களை உடையவனாக ஆகிறான். (1)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத  (2)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (2)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ வாயுர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ வாயோராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை வாயோராயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (3)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)

யோபா மாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோமுஷ்ய தபத ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (4)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யச்சந்த்ரமஸ ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (5)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5) 

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (6)


யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)

யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ பர்ஜன்யோ வாஅபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (7)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (7)

யோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத  (8)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோஅவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)

யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத/ ப்ரத்யேவ திஷ்டதி  (9)

யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோஅவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9) 

ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே/ நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே/ ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்/ காமேச்வரோ வைச்ரவணோ ததாது/ குபேராய வைச்ரவணாய/ மஹா ராஜாய நம:  (10)

தலைவர்களுக்கெல்லாம் தலைவனும்பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம். விருப்பங்களை நிறைவேற்றுபவனும்செல்வத்தின் தலைவனான அவன்என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு,மன்னாதிமன்னனுக்கு வணக்கங்கள். 

ஓம் பத்ரம் கர்ணேபி.....(எனும் சாந்தி பாடத்துடன் நிறையும்)



ஓம் ஷாந்தி: ஷாந்தி: ஷாந்தி

உதவியவை:

அண்ணா/ஸ்வாமி ஆசுதோஷானந்தர் - “வேத மந்திரங்கள்”.

4 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மந்திரபுஷ்பம் பற்றி அழகான அருமையான யஜுர்வேத ஸ்லோகங்களும் தகவல்களும் கொடுத்து அசத்தியுள்ளதற்கு என் நன்றியோ நன்றிகள்.

//“ நிலவே நீரின் மலர்” என்று முதலாம் ச்லோகத்தில் துவங்கும் வசீகரம் கிளர்த்துகிறது; கவிதையின் வேர் கிளை பரப்பி, ப்ரார்த்தனையாக வடிவெடுத்து மயக்கும் மாயம்; //

இதை “கைகள் அள்ளிய நீரினால்” நீர் எடுத்துச்சொன்னது தனிச்சிறப்பு. ;)

G.M Balasubramaniam சொன்னது…


செவிக்குணவாகப் பல முறை கேட்டு ரசித்திருக்கும் இந்த மந்திர புஷ்பாஞ்சலி பொருள் அறியும்போது இன்னும் சுவையாய் இருக்கிறது சுந்தர்ஜி. சாதாரண நிலையில் எழுதியது போதும் என்று அடுத்த நிலைக்குசெல்லும் கணங்களாக உங்கள் பதிவுகள் பரிமளிக்கின்றன.. வாழ்த்துக்கள்.

ரிஷபன் சொன்னது…

இதை “கைகள் அள்ளிய நீரினால்” நீர் எடுத்துச்சொன்னது தனிச்சிறப்பு. ;)
வைகோ ஸார் முன்னால் நாம் கை கட்டித்தான் நிற்கவேண்டும் ! சரியான இடத்தில் சரியான வார்த்தைகளினால் பின்னூட்டம் இடுவதில் அவருக்கு நிகர் அவரே

ரிஷபன் சொன்னது…

முழுப் பொருளும் இன்று உங்களால் அறிந்தேன்.. லகுவாய் கிடைத்த மொழிபெயர்ப்பும் மந்த்ர த்வனியும் சாந்தி தந்தன..

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...