14.9.13

சுபாஷிதம் 15

281.
னோ துகரோ மேகோ மத்யபோ த்குணோ ருத்
மா தோ ர்க்கடோ த்ஸ்யோ மகாரா தச சஞ்சலா:

மனம், தேனீ, மேகம், குடிகாரன், மூட்டைபூச்சி, காற்று, செல்வம், வெறி, குரங்கு, மீன் என்ற இந்தப் பத்தும் அலையும் குணம் கொண்டவை.

(சமஸ்க்ருதத்தில் 'ம' என்னும் வர்க்கத்தில் துவக்க எழுத்துக் கொண்ட பத்துச் சொற்கள் இவை)

282.
யதிதம் மனஸா வாசா சக்ஷுப்யாம் ச்ரவணாதிபி:
நச்வரம் க்ருஹ்யமாணம் ச வித்தி மாயாமனோமயம்
-ஸ்ரீ உத்தவ கீதை - 7:7

மனம், வாக்கு, கண்கள், செவி என்னும் புலன்களால் எவையெல்லாம் கிரகிக்கப்படுகின்றனவோ, அவையெல்லாம் அழியும் தன்மை உடையவை; மாயையால் மனதில் தோன்றுபவை என்றும் அறிவாய்.

283.
வைத்யராஜ நமஸ்துப்யம் யமராஜ சஹோதர
யமோ ஹரதி ப்ராணான் வை வைத்ய: ப்ராணான் தனானி ச

மருத்துவரே! காலதேவனின் சகோதரா! உமக்கு வணக்கம். உமது சகோதரர் உயிரை எடுத்துச் செல்கிறார். நீரோ உயிருடன் செல்வத்தையும் எடுத்துச் செல்கிறீர்.

284.
விஷயேஷ்வாவிசந் யோகீ நாநாதர்மேஷு ஸர்வத:
குணதோஷவ்யபேதாத்மா ந விஷஜ்ஜேத வாயுவத்
-ஸ்ரீ உத்தவ கீதை - 7:40

காற்று எல்லா இடங்களிலும் வீசிக் கொண்டிருப்பினும், எதனுடனும் ஒட்டுறவு கொள்ளாது, எப்பொருளின் மணத்தையும் தக்க வைத்துக் கொள்ளாதிருப்பதைப் போல, ஒரு யோகி எங்கும் பலவகையான விஷயங்களிலும் உட்புகுந்து பார்ப்பவனாயினும் அவற்றின் குண தோஷங்களினால் பற்றப்படாது இருக்க வேண்டும்.

285.
சிதாம் ப்ரஜ்வலிதாம் த்ருஷ்ட்வா வைத்ய: விஸ்மயமாகத:
நாஹம் கதஹ ந மய ப்ராதா கஸ்யேதம் ஹஸ்தலாகவம்

எரிந்து கொண்டிருக்கும் சிதையைக் கண்ட மருத்துவரின் எண்ண ஓட்டம்: 'நானோ, என் தம்பியோ இவருக்கு மருத்துவம் பார்க்கவில்லை. இது யாரின் வேலையாய் இருக்கும்?'

286.
தேஜஸ்வீ தபஸா தீப்தோ துர்தர்ஷோதரபாஜந:
ஸர்வபக்ஷோபி யுக்தாத்மா நாதத்தே மலமக்நிவத்
-ஸ்ரீ உத்தவ கீதை - 7:45

அக்னி நல்லது கெட்டது என்ற பேதமற்று இட்ட எதையும் எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது. எதையும் ஒதுக்காத ஞானியின் தவச்சுடரிலும் எல்லாமே சுட்டெரிக்கப்படுகின்றன.

287.
பாலஸ்யாபி ரவே: பாதா: பதந்த்யுபரி பூப்ருதாம்
தேஜஸா ஸஹ ஜாதானாம் வய: குத்ரோபயுஜ்யதே

இளஞ் சூரியனின் பாதங்களால் இமயத்தின் சிகரங்கள் எட்டப்பட்டு விடுகையில், சாதனைக்கும் வயதுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

288.
குணைர் குணாநுபாதத்தே யதா காலம் விமுஞ்சதி
ந தேஷு யஜ்யதே யோகீ கோபிர் கா இவ கோபதி:
-ஸ்ரீ உத்தவ கீதை - 7:50

சூரியன் தண்ணீரை உறிஞ்சி மழையாகப் பொழிவது போல, ஒரு யோகி பொருளைப் பெறுவதிலும், கொடுப்பதிலும் பற்றுதல் இல்லாமல் இருக்க வேண்டும்.

289.
ஸர்வத்ர தேசே குணவான் சோபதே ப்ரதித: நர:
மணி: சீர்சே கலே பாஹௌ யத்ர குத்ர அபி சோபதே

சிரத்திலோ கழுத்திலோ கரத்திலோ எங்கு அணிந்தாலும் முத்து அழகுதான். குணவான்களும் ஒரு நாட்டின் எல்லா இடங்களிலும் கொண்டாடப் படுகிறார்கள்.

290.
அணுப்ப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்ய: குசலோ நர:
ஸர்வத: ஸாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத:
-ஸ்ரீ உத்தவ கீதை - 8:10

தேனீ, மலர்களை நாசம் செய்யாமல் மலர்களின் சாரமான தேனைப் பருகுவது போல், அறிவாளி சிறிய பெரிய சாத்திரங்களில் இருந்து அதன் சாரங்களை மட்டும் கிரகித்துக் கொள்ள வேண்டும்.

291.
கிந்து மத்யம் ஸ்வபாவேன யதௌஷதம் ததா ஸ்ம்ருதம்
அயுக்தியுக்தம் ரோகாய யுக்தியுக்தம் ததா ஸ்ம்ருதம்

பயன்பாடு சரியானதாய் இருப்பின் மதுவும் மருந்தாகும்; அல்லாது போனால் அதுவே நோயாகும்.

292.
ஸாமிஷம் குரரம் ஜக்நுர் பலிநோ யே நிராமிஷா:
ததாமிஷம் பரித்யஜ்ய ஸ ஸுகம் ஸமவிந்தத
-ஸ்ரீ உத்தவ கீதை - 9:2

மாமிசத் துண்டு கிடைத்த ஒரு குர்ரப் பறவையை, அது கிடைக்காத பிற பறவைகள் தாக்கின. குர்ரப் பறவை (கவ்வியிருந்த) மாமிசத் துண்டைக் கைவிட்டதும் அது சுகத்தை அடைந்தது.

293.
ப்ரத்யக்ஷ கவிகாவ்யம் ச ரூபம் ச குலயோஷித:
க்ருஹவைத்யஸ்ய வித்யா ச கஸ்யைசித்  யதிரோசதே

கவிஞன் வடிக்கும் காவியமும், குலப்பெண்ணின் வனப்பும், குடும்ப மருத்துவனின் வித்தையும் கண்ணெதிரே தென்பட்டாலும் கவனம் பெறுவதில்லை.

294.
த்வாவேவ சிந்தயா முக்தௌ பரமாநந்த ஆப்லுதௌ
யோ விமுக்தோ ஜடோ பாலோ யோ குணேப்ய: பரம் கத:
-ஸ்ரீ உத்தவ கீதை - 9:4

உலகத்தின் கவலைகள் ஏதுமின்றி, எப்போதும் பரம இன்பத்தில் மூழ்கியிருக்கும் இருவர், சூதுவாது அறியாத, வேற்றுமை உணர்வு தோன்றாத, இன்பத்துக்குக் காரணம் தேடாத குழந்தையும், குணங்களை எல்லாம் கடந்த ஞானியும் மட்டுமே.

295.
அல்பகார்யகரா: ஸந்தி யே நரா பஹுபாஷிண:
சரத்காலின மேகாஸ்த்தே நூனம் கர்ஜந்தி கேவலம்

இலையுதிர்கால இடிமுழக்கம் மழையைத் தருவிப்பதில்லை; அதுபோல அதிகம் பேசுபவர்கள் செயல்வன்மை அற்றவராய் இருப்பார்.

296.
க்ருஹாரம்போஹி து:காய விபலச்சாத்ருவாத்மந:
ஸர்ப்ப: பரக்ருதம் வேச்ம ப்ரவிச்ய ஸுகமேததே
-ஸ்ரீ உத்தவ கீதை - 9:15

திட்டமிட்டுப் பெரிய வீடு கட்டுவது துக்கத்தின் தொடக்கம். பயனற்றது. பிற உயிரினங்களால் உருவாக்கப்பட்ட புற்றில்தான் பாம்பு புகுந்து சுகமாக வாழ்கிறது.

297.
கல்பத்ரும: கல்பிதமேவ ஸூதே ஸா காமதுக் காமிதமேவ தோக்தி
சிந்தாமணிஸ்சிந்திதமேவ தத்தே ஸதாம் து ஸங்க: ஸகலம் ப்ரஸூதே

கற்பக மரம் நினைத்ததை மட்டும் தரும்; காமதேனு தேவையானதை மட்டும் தரும். சிந்தாமணி சிந்தித்ததை மட்டும் தரும். நல்லோரின் நட்போ எல்லாவற்றையும் தரும்.

298.
யதோர்ணநாபிர் ஹ்ருதயாதூர்ணாம் ஸந்தத்ய வக்த்ரத:
தயா விஹ்ருத்ய பூயஸ்தாம் க்ரஸத்யேவம் மகேச்வர:
-ஸ்ரீ உத்தவ கீதை - 9:21

சிலந்தி தன் உள்ளிருந்து, தன் வாய் வழியே நூலைக் கொண்டு வலையைப் பின்னுகிறது. பின் அதுவே தனக்குள்ளே அதை இழுத்துக் கொள்கிறது. உலகத்தைப் படைத்த இறைவனும் இப்படித்தான் செய்கிறார்.

299.
குருசுச்ரூஷயா வித்யா புஷ்கலேன தனேன வா
அத வா வித்யயா வித்யா சதுர்த்தோ ந உபலப்யதே

குரு சேவையாலோ, செல்வத்தாலோ, அறிவுப் பரிமாற்றத்தாலோ கல்வி பெறலாம். இவையன்றி நான்காவதாய் வேறேதும் வழியில்லை.

300.
யத்ர யத்ர மநோ தேஹீ தாரயேத் ஸகலம் தியா
ஸ்நேஹாத் த்வேஷாத் பயாத் வாபி யாதி தத்தத் ஸவரூபதாம்
-ஸ்ரீ உத்தவ கீதை - 9:22

உடலை எடுத்தவன், மனதால் எதை எதைப் பற்றி - அன்பினாலோ, வெறுப்பினாலோ, அச்சத்தினலோ - சிந்தனை செய்கிறானோ, அவன் அந்தந்த உருவத்தையே அடைகிறான்.

2 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அனைத்துமே அருமையாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

விளக்கங்களை அறிந்து கொண்டோம்....

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...