23.7.10

இளவரசியின் அரண்மனை



கரையில் கட்டிய அரண்மனையை
அலை இழுத்துப் போனது.
வீட்டுக்கு எடுத்துப் போனோம்
அலையை நானும்
அரண்மனையை
என் குட்டிப் பெண்ணும்.

7 கருத்துகள்:

Madumitha சொன்னது…

அவரவர் சொத்து அவரவருக்கே.

ஹேமா சொன்னது…

அந்தந்த வயதில் யார் யாருக்கு என்ன தேவைப்படுமோ அதுவே காவப்படுகிறது !

ரிஷபன் சொன்னது…

கவிதையை நாங்களும்

நிலா மகள் சொன்னது…

நிஜ வாழ்வின் சொத்து மதிப்பைக் காட்டிலும் சில நினைவுகளின் பெறுமானம் அதிகமே...
தங்கள் இல்லத்தில் இச் சிறியேனுக்கும் ஒரு ஆசனமளித்தது பெருமகிழ்வு. தரமான கவிதைகளை பக்கவாட்டில் படிக்கிற போதெல்லாம்
நம் படைப்பும் இதில் இடம் பெருமளவு எழுத வேண்டும் என்று தோன்றும். கணப் படுத்தி விட்டீர்கள் ஜி! மிக்க நன்றி!!

கமலேஷ் சொன்னது…

ரொம்ப பிடிட்சிருக்குங்க..

vasan சொன்னது…

அலைபாய்ப‌வ‌ருக்கு, அலையும்.
இள‌வ‌ர‌சிக்கு, அர‌ண்ம‌னையும்.

சைக்கிள் சொன்னது…

கனவுகளை இருவரும்?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...