6.9.13

சுபாஷிதம் - 12


221.
ஜலபிந்துநிபாதேன க்ரமச: பூர்யதே கட:
ததா ஹி ஸர்வவித்யானாம் கர்மஸ்ய ச தனஸ்ய

எப்படித் தொடர்ச்சியாய்க் கசியும் நீர்த்துளிகள் ஒரு பானையை நிரப்புமோ, அதுபோல கல்வி, வினை, செல்வம் இம்மூன்றும் சிறுகச்சிறுக நிறையும்.

222.
உபார்ஜிதானாம் வித்தானாம் த்யாக ஏவ ஹி ரக்ஷணம் 
தடாகோதரஸம்ஸ்தானாம் பரீவாஹ இவாம்பஸாம் 

நிரம்பிய ஏரியைத் திறந்து விடுதல் ஏரியைத் தூய்மையாக்கிக் காப்பது போல, அடைந்த செல்வத்தைக் காக்கும் ஒரே உபாயம் பிறர்க்கு அதைக் கொடுப்பதுதான்.

223.
துர்லபம் த்ரயமேவைதத் தேவானுக்ரஹஹேதுகம் 
மனுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹாபுருஷஸ்ஸ்ரய:

பிறப்பு, வீடுபேறு, மாமனிதர்களின் நட்பு இம்மூன்றும் தெய்வத்தின் கட்டளையின்றி நிகழாது.


224.
கலஹாந்தனி ஹர்ம்யாணி குவாக்யானாம் ச சௌஹ்ருதம் 
குராஜாந்தானி ராஷ்ட்ராணி குகர்மாந்தம் யசோ ந்ருணாம் 

பிணக்கு குடும்பத்தையும், கடுஞ்சொல் நட்பையும், மோசமான அரசு நாட்டையும், விதைத்தவனைத் தீவினையும் அழித்து விடும்.

225.
ஸுகார்த்தீ த்யஜதே வித்யாம் வித்யார்த்தீ த்யஜதே ஸுகம் 
ஸுகார்த்தின: குதோ வித்யா குதோ வித்யார்த்தின: ஸுகம்

இன்பத்தின் பின்னே செல்பவன் கல்வியையும், கல்வியின் பின்னே செல்பவன் இன்பத்தையும் துறக்கிறான். சுகமுற்றோனுக்குக் கல்வியும், கற்றோனுக்குச் சுகமும் எப்போது கிட்டும்?

226.
தானம் போகோ நாச: திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய 
யோ ந ததாதி ந புங்க்தே தஸ்ய த்ருதியா கதிர்பவதி 

ஆக்கும், காக்கும், அழியும் என்பவை செல்வத்தின் முக்குணங்கள். ஆக்கவோ, காக்கவோ பயன்படா செல்வம் அழியும்.

227.
யாத்ருசை: ஸன்னிவிசதே யாத்ருசாஞ்ச்சோபஸேவதே   
யாத்ருகிச்சேச்ச பவிதும் தாத்ருக்பவதி புருஷ:

யாருடன் பழகுகிறோமோ, சேவை செய்கிறோமோ, யாரை ஒற்றெடுக்க விழைகிறோமோ அவர் போலவே ஆகி விடுகிறோம்.


228.
குணீ  குணம் வேத்தி ந வேத்தி நிர்குணோ பலீ பலம் வேத்தி ந வேத்தி நிர்பல:
பிகோ வஸந்தஸ்ய குணம் ந வாயஸ: கரீ ச ஸிம்ஹஸ்ய பலம் ந மூஷக:

குணவானைக் குணமற்றோன் அறியான். வலியோனை எளியோன் அறியான். வசந்தத்தின் குணத்தைக் குயிலன்றிக் காகமறியாது. சிங்கத்தின் பலத்தை யானையன்றி மூஞ்சூறு அறியாது.

229.  
பதாஹதம் ஸதுத்தாய மூர்க்கானமதிரோஹதி 
ஸ்வஸ்தாதேவாபமானேபி தேஹினஸ்வத்ரம் ரஜ:

மோசமாக அவமானமுற்றும் சொரணையற்று அமர்ந்திருப்பவனைக் காட்டிலும், எடுத்து வைத்த காலடிக்கு அவமதித்ததாய் எண்ணி மூர்க்கமாய் எழும் தூசி மேலானது.  

230.
அதாதா புருஷஸ்த்யாகீ தனம் ஸம்த்யஜ்ய கச்சதி
தாதாரம் க்ருபணம் மன்யே ம்ருதோப்யர்த்தம் ந முஞ்சதி

இறக்கும் போது, கருமி தன் செல்வங்களை எல்லாம் விட்டுவிட்டு வெறுங்கையுடன் செல்வதால் அவனே கொடையாளி. கொடையாளி எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுத் தன்னுடன் கொடையின் பலன்களை எடுத்துச் செல்வதால் அவனே கருமி.      

231.
அப்யாஸாத் தார்யதே வித்யா குலம் சீலேன தார்யதே 
குணேன ஞாயதே த்வார்ய: கோபோ நேத்ரேண கம்யதே 
-சாணக்யநீதிஸார் 

பயிற்சியால் கல்வியையும், நடத்தையால் குலத்தையும், தர்மத்தால் குணத்தையும், கண்களால் சினத்தையும் கண்டுகொள்ளலாம்.

232.
கஸ்யைகாந்தம் ஸுகம் உபனதம் துக்கம் ஏகாந்ததோ வா 
நீசைர் கச்சதி உபரி ச தசா சக்ரனேமிக்ரமேண 
-மேகதூத் (காளிதாஸ்)

சுழலும் சக்கரத்தின் ஒரு புள்ளி மேலும் கீழும் சென்று வருதல் போல இடைவிடாது இன்புறுவோருமில்லை; துயருறுவோருமில்லை. 

233.
ப்ரத்யஹம் ப்ரத்யவேஷேத நரஸ்ச்சரிதமாத்மான:
கின்னு மே பசுபிஸ்துல்யம் கின்னு ஸத்புருஷைரிதி 

மிருகங்களிலும், மேன்மையானோரிலும் ப்ரதிபலிக்கும் தன் குணங்கள் எவை எவையென ஒவ்வொரு தினமும் ஒருவன் ஆராய வேண்டும்.

234.
அவ்யாகரணமதீதம் பின்னத்ரோணயா தரகிணீதரணம் 
பேஷஜமபத்யஸகிதம் த்ரயமிதம்க்ருதம் வரம் ந க்ரதம் 

இலக்கணமறியாக் கல்வி, துளையுற்ற படகு, பத்தியமற்ற மருந்து இம்மூன்றாலும் பயனின்மை அதிகம். தவிர்த்தல் வரம். 

235.
சைலே சைலே ந மாணிக்யம் மௌக்திகம் ந கஜே கஜே 
ஸாதவோ ந ஹி ஸர்வத்ர சந்தனம் ந வனே வனே 
-ஹிதோபதேச 

மாணிக்கம் எல்லா மலைகளிலும், ஆணிமுத்து எல்லா யானைகளிலும், சந்தனம் எல்லா வனங்களிலும் எப்படிக் கிடைப்பதில்லையோ அதுபோலத்தான் நன்மக்களும்.

236.
ஸர்வம் பரவசம் துக்கம் ஸர்வம் ஆத்மவசம் ஸுகம் 
ஏதத் வித்யாத் ஸமாஸேன லக்ஷணம் ஸுகதுக்கயோ:

துயருக்கான காரணங்கள் பிறர் கட்டுப்பாட்டில்; சுகத்துக்கான காரணங்கள் நம் கட்டுப்பாட்டில். இன்ப துன்பத்தின் குணாதிசயம் இவ்வளவுதான்.


237.
ஆலஸ்ய குதோ வித்யா அவித்யஸ்ய குதோ தனம் 
அதனஸ்ய குதோ மித்ரம் அமித்ரஸ்ய குதோ ஸுகம் 

சோம்பேறிக்கு ஏது கல்வி? கல்லானுக்கு ஏது செல்வம்? வறியோனுக்கு ஏது நட்பு? நட்பற்றோனுக்கு ஏது சுகம்?

238.
ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் 
ஸர்வதேவநமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி.

வானிலிருந்து வீழும் மழை நதிகளில் கலந்து கடலை அடைகிறது. எல்லா தெய்வங்களுக்கும் செலுத்தும் வணக்கங்கள் அத்தனையும் கேசவனை அடைகின்றன.

239.
அனேகசாஸ்த்ரம் பஹுவேதிதவ்யம் அல்பஸ்ச்ச காலோ பகவஸ்ச்ச விக்னா:
யத் ஸாரபூதம் ததுபாஸிதவ்யம் ஹம்ஸோ யதா க்ஷீரமிவாம்புமத்யாத் 

பயிலவேண்டிய சாத்திரங்கள் ஏராளம்; காலம் உருகுகிறது. தடைகள் பெருகுகிறது. நீரோடு கலந்த பாலை அன்னம் பிரித்துப் பருகுதல் போல் சாரத்தையும் சக்கையையும் பிரித்தறிந்து பயில வேண்டும்.    

240.
திவஸேனைவ தத் குர்யாத் யேன ராத்ரௌ ஸுகம் வஸேத் 
யாவஜ்ஜீவம் ச தத்குர்யாத் யேன ப்ரேத்ய ஸுகம் வஸேத் 
-விதுர நீதி 

இரவில் அமைதியாய் உறங்க வைக்கும் செயலை நாள் முழுதும் செய்; இறந்த பின் அமைதியாய் வாழ வைக்கும் செயலை ஆயுளெல்லாம் செய்.

2 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

பிறப்பு, அமரத்வம், மாமனிதர்களின் நட்பு இம்மூன்றும் தெய்வத்தின் கட்டளையின்றி நிகழாது.//

மட்டுமல்ல.. இந்தப் பதிவின் சுபாஷிதங்கள் அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் வியப்படையவும் சிந்தை கிளர்த்தவுமாக உள்ளன ஜி. ஞானத்தின் சாறு தங்கள் தயவால்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஒவ்வொரு செய்திகளும் விளக்கங்களும் சிந்திக்க வைப்பவைகளாகவே உள்ளன.

பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...