12.9.13

சுபாஷிதம் -14

261.
அபிகம்யக்ருதே தானம் த்ரேதாஸ்வாஹூயதீயதே
த்வாபரே யாசமானாய ஸேவயா தீயதே கலௌ
-பராசர ஸ்ம்ருதி 1-28

க்ருத யுகத்தில் கொடுப்பவன் யாசிப்பவனை அடைந்தும்,
த்ரேதா யுகத்தில் யாசிப்பவனை வரவழைத்தும், த்வாபரத்தில்
தன்னிடம் வந்து யாசிப்பவனுக்கும், கலியுகத்தில் செய்த சேவைக்கு
ஈடாகவும் தானம் செய்யப்படுகிறது.

262.
அபிகம்யோத்தமம் தானமாஹூயைவ து மத்யமம்
அதமம் யாசமானாய ஸேவாதானம் து நிஷ்பலம்
-பராசர ஸ்ம்ருதி 1-29

தானே அளிக்கும் தானம் உயர்ந்தது; யாசகனை வரவழைத்துக்
கொடுப்பது நடுத்தரமானது; தன்னிடம் வந்து யாசிப்பவனுக்குக்
கொடுத்தல் கீழானது; சேவைக்கு ஈடாய் தானமளிப்பது ஒரு பலனுமற்றது.

263.
ஜிதோ தர்மோ ஹ்யதர்மேண ஸத்யம் சைவாந்ருதேன ச
ஜிதாச்சோரைஸ்ச ராஜாந: ஸ்த்ரீபிஸ்ச புருஷா: கலௌ
ஸீதந்தி சாக்னிஹோத்ராணி குருபூஜா ப்ரணச்யதி
குமார்யாஸ்ச ப்ரஸூயந்தே தஸ்மின் கலியுகே ஸதா
-பராசர ஸ்ம்ருதி 1-30, 31.

கலியுகத்தில் அதர்மத்தால் தர்மமும், பொய்மையால் வாய்மையும் வெல்லப்படும். கள்வர்களால் அரசனும், பெண்களால் ஆண்களும் வெல்லப்படுவார்கள். வேள்விகள் குறையும்; குருவணக்கம் தேயும்; குமரிகள் தாயாவார்கள்; கலியுகத்தின் குணநலன்கள் இவ்வாறே அமையும்.

264.
ஸுக்ஷேத்ரே வாபயேத்பீஜம் ஸுபாத்ரே நிக்ஷிபேத் தனம்
ஸுக்ஷேத்ரே ச ஸுபாத்ரே ச ஹ்யுப்தம் தத்தம் ந நச்யதி
-பராசர ஸ்ம்ருதி 2-47

நல்ல பூமியில் விதை விதைக்கப்படட்டும்; பாத்திரம் அறிந்து தானம்
வழங்கப் படட்டும். நல்ல பூமியில் விதைக்கப்பட்டதும், பாத்திரமறிந்து
வழங்கப்பட்ட தானமும் வீணாவதில்லை.

265.
துக் மே ஸிம்ரன் ஸப் கரே ஸுக் மே கரே ந கோயே
ஜோ ஸுக் மே ஸிம்ரன் கரே தோ துக் கஹே கோ ஹோயே
-கபீர்

துன்பத்தில் உழல்கையில் ப்ரார்த்திப்பவர்கள் இன்பத்தில் திளைக்கையில்
துதிப்பதில்லை; இன்பத்திலும் ப்ரார்த்திக்கக் கற்றவனுக்குத் துன்பம் எங்கிருந்து வரும்?

266.
அகத் கஹாநீ ப்ரேம் கீ குச் கஹீ ந ஜாய்
கூங்கே கேரீ ஸர்க்கரா பைடே முஸ்க்காய்
-கபீர்

அன்பின் கதை சொல்ல மொழி ஏதுமில்லை. இனிப்பைச் சுவைத்த
ஊமையின் புன்னகையை மொழி பெயர்த்தல் கூடுமோ?

267.
கபீரா கர்வ் ந கீஜீயே ஊஞ்ச்சா தேக் ஆவாஸ்
கால் பரௌன் புங்யி லேட்னா ஊபர் ஜம்ஸி காஸ்
-கபீர்

கபீர் சொல்வதைக் கேள்: வானுயர்ந்த உன் மாளிகையைக் கண்டு
கர்வங் கொள்ளாதே; காலன் உன்னைக் கட்டாந்தரையில் படுக்கச்
செய்வான்; உன் மீது புல் முளைக்கும்.

268.
ஜ்யோன் நைனோம் மே புத்லீ த்யோன் மாலிக் கட் மாஹிம்
மூரக் லோக் ந ஜானஹின் பாஹிர் தூதன் ஜாஹின்
-கபீர்

கண்ணிற்குள் மணியாய் உள்ளுறைவான் இறைவன்;
அறியா மூடர் அவனை வெளியே தேடி அலைவார்.

269.
ஜப் தூ ஆயா ஜகத் மே லோக் ஹன்ஸே தூ ரோயே
ஐஸீ கர்னீ ந கரீ பாச்சே ஹன்ஸே ஸப் கோயே
-கபீர்

பிறக்கும்போது எல்லோரும் சிரிக்க நீ அழுதாய்;
நீ விடைபெறும்போதும் மீண்டும் எல்லோரும் சிரிக்காதிருக்கட்டும்.

270.
ந ப்ரஹ்ருஷ்யதி ஸன்மானே நாபமானே ச குப்யதி
ந க்ருத்த: பருஷம் ப்ரூயாத் ஸ வை ஸாதூத்தம: ஸ்ம்ருத:
-மனு ஸ்ம்ருதி

சன்மானத்தாலும் அவமானத்தாலும் நிலைகுலையாதவரும்,
சினமுற்ற போதும் பிறரைப் புண்படுத்தாதோருமே சான்றோர்.

271.
ஹர்ஷஸ்த்தான ஸஹஸ்ராணி பயஸ்த்தான சதானி ச
திவஸே திவஸே மூடம் ஆவிசந்தி ந பண்டிதம்

முட்டாளுக்கு தினந்தினம் மகிழ ஆயிரம் விஷயங்களும், அஞ்ச நூறு
விஷயங்களும் இருக்கும். நிலைபெற்றவனின் மனதுக்கோ இரு நிலைகளுமில்லை.

272.
தீர்க்கோ வை ஜாக்ரதோ ராத்ரி: தீர்க்க ச்ராந்தஸ்ய யோஜனம்
தீர்க்கோ பாலானாம் ஸம்ஸார: ஸத்தர்மம் அவிஜாநதாம்

உறங்காதவனுக்கு இரவு நீள்கிறது; களைத்தவனுக்கு அண்மையும் தொலைவாகிறது. தர்மநெறி உணராத சிறியோருக்கு வாழ்வு நீள்கிறது.

273.
த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோபிஜாயதே
-பகவத் கீதா - 2.62

புலன்களை ஈர்ப்பவை பற்றிச் சிந்திப்பவனுக்கு அவற்றில் பற்று உண்டாகிறது; பற்றிலிருந்து ஆசையும், ஆசையிலிருந்து சினமும் உருவாகின்றன.

274.
நாத்யந்த குணவத் கிஞ்சித் ந சாப்யத்யந்தநிர்குணம்
உபயம் ஸர்வகார்யேஷு த்ருச்யதே ஸாத்வஸாது வா

எந்த ஒரு செயலிலும் முழுமையாய் நன்மை, தீமையென்று எதுவுமில்லை.
எல்லாச் செயலிலும் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும்.

275.
ஸுகமாபதிதம் ஸேவ்யம் துக்கமாபதிதம் ததா
சக்ரவத் பரிவர்த்தந்தே துக்கானி ச ஸுகானி ச
-மஹாபாரத்

இன்பத்தை நுகர்வது போலவே வாழ்வின் துன்பத்தையும் சமமாய் ஏற்கவேண்டும்; சக்கரத்தின் சுழற்சி போல இன்பமும் துன்பமும் மாற்றத்துக்குரியவை.

276.
உபாப்யாமேவ பக்ஷாப்யாம் சதா கே பக்ஷிணாம் கதி:
ததைவ ஞானகர்மப்யாம் ஜாயதே பரம் பதம்
-யோக வாசிஷ்டம்

வானில் இறக்கைகள் இரண்டின் உபாயத்தால் பறவைகளின் போக்கு
அமைவது போல, வீடுபேற்றை அடையும் வழி அறிவு மற்றும் செயல்
இரண்டாலும் அமைகிறது.

277.
ஏகேன அபி ஸுபுத்ரேண சிம்ஹீ ஸ்வபிதி நிர்பயம்
ஸஹ ஏவ தசபி: புத்ரை: பாரம் வஹதி கர்தபீ

ஒரு குட்டியை ஈன்ற பெண் சிங்கம் அச்சமின்றி உறங்கும். ஆனால்
பத்துக் குட்டிகளை ஈன்றாலும் தன் பாரத்தைத் தானே சுமக்கும் கழுதை.

278.
ஸுகம் சேதே ஸத்யவக்தா ஸுகம் சேதே மிதவ்யயீ
ஹிதபுக் மிதபுக் சைவ ததைவ விஜிதேந்த்ரிய:

உண்மையைப் பேசுபவனாலும், குறைவாய்ச் செலவழிப்பவனாலும்,
சத்தான உணவைக் குறைவாய் உண்பவனாலும், புலன்களை வென்றவனாலும் அமைதியாய்த் துயில முடியும்.

279.
தாதவ்யம் போக்தவ்யம் தனவிஷயே சஞ்சயோ ந கர்தவ்ய:
பச்யேஹ மதுகரீணாம் ஸஞ்சிதார்த்தம் ஹரந்த்யன்யே

செல்வம் கொடுக்கவோ அனுபவிக்கப்படவோ வேண்டுமேயன்றி
சேமித்து வைப்பது கூடாது; நெடுநாட்கள் தேனீக்களால் சேமிக்கப்படும்
தேன் பிறரால் அபகரிக்கப்படுகிறது.

280.
பஹ்வீமபி ஸம்ஹிதாம் பாஷமாண: ந தத்கரோ பவதி நர: ப்ரமத்த:
கோப இவ கா கணயன் பரேஷாம் ந பாக்யவான் ச்ராமண்யஸ்ய பவதி
-தம்மபதம்

ஏராளமான சாத்திரங்களைக் கற்றும் அதன்படி நில்லாது போனவன்,
இன்னொருவனின் மாடுகளை தினமும் எண்ணிப் பார்க்கும் மேய்ப்பவனுக்குச் சமமாவான்.

2 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

//அன்பின் கதை சொல்ல மொழி ஏதுமில்லை.

இனிப்பைச் சுவைத்த ஊமையின் புன்னகையை மொழி பெயர்த்தல் கூடுமோ?//

;)))))

G.M Balasubramaniam சொன்னது…

அத்தனையும் சத்தான முத்துக்கள். இருப்பினும் கூடுதலாக ரசித்ததுசுபாஷிதம் எண்கள் 268.274.278&279.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...