7.9.13

ஊதுவத்திக் கவிதைகள்


1.

’அருகில் நீயில்லை
எனும்போதுதான்
தெரிந்தது 
அருகில் நீ இருந்தது’
என்றேன்.

’இல்லாத போது
இருந்ததைச் சுமக்கிறாய்;
இருக்கும்போது 
இல்லாததைச் சுமக்கிறாய்’
என்றான்.

2.

வழக்கமாய் 
'உன்னிடத்தில் 
நான் இருந்திருந்தால் 
அந்தத் தவறைச் 
செய்திருக்க மாட்டேன்' 
என்பவன்- 

'என்னிடத்தில் 

நீ இருந்திருந்தால் 
அந்தத் தவறைச் 
செய்திருக்க மாட்டாய்' 
என்றான்.

பதிலுக்கு 

'உன்னிடத்தில் 
நான் இருந்திருந்தால் 
உன்னை 
மன்னித்திருக்க மாட்டேன்'
என்பவள்-

'என்னிடத்தில் 

நீ இருந்திருந்தால் 
அந்தத் தவறை 
மன்னித்திருப்பாய்'  
என்றாள்.

2 கருத்துகள்:

பத்மா சொன்னது…

உம்மிடத்தில் இது இருந்தால்
கண்டிருக்கமாட்டோம்
எம்மிடத்தில் வந்ததால் இதன்
உச்சி தனை முகர்வோம்

ரிஷபன் சொன்னது…

(நி)தர்சனங்கள் !

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...