
தேர்ச் சக்கரங்களின்
சோம்பலைப் பூசித்
தயாராகிறேன்.
யூகங்களில் மெருகேறுகிறது
குமட்டும் என்
குருட்டு ஒப்பனை.
பரிமாற எதுவுமற்றுக்
கரும் பூனை உறங்குவதாய்ப்
புழக்கமற்ற மேடை.
எப்போதும் போலத்
தொடங்காத விருந்தைப்
பொய் போர்த்தி மூடுகிறது
வியாதி ஒன்றின்
பெயர் சொல்லி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக