11.3.10

நீயும் நானும்


I
அந்த
வெற்றுத்தாளில்
புதைந்திருக்கிறது
உன் செருக்கு.
தடயங்களை
அழிக்கக்காத்திருக்கிறது
காலம்.
உன் செல்வாக்கு
கைகளில் அள்ளிய நீர்.
உன் அரசியல்
காற்றோடுபோன
கோலத்தின் புள்ளி.

II
அந்த
வெற்றுத்தாளில்
புதைந்திருக்கிறது
என் மௌனம்.
தடயங்கள் அற்ற
சுவடுகள் பதித்து
என் பயணம்.
என் செல்வாக்கு
காலத்தின் ஆயுள்ரேகை.
என் அரசியல்
காற்றையும் கடந்த
மனோரஞ்சிதம்.

1 கருத்து:

இரசிகை சொன்னது…

2 kavithaikalume azhagu...

yenakku "ninaiththu ninaiththu paarththen"(7G RAINBOW COLONY) song-i male voice laiyum female voice laiyum ketta gnapakam varuthu:))

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...