12.3.10

பிம்பம்




உன் மொழி
முறுக்கேற்றப்பட்ட வில்.
குரல்
ஓடும் நதியின் சலசலப்பு.
உறுதி
பாலையைக் கடக்கும்
ஒட்டகக் குளம்பு.
உன் பார்வை
வேப்ப நிழல்.
என் ஏமாற்றம்
வெற்றுத் திரையின்
நிசப்தம்.

1 கருத்து:

சைக்கிள் சொன்னது…

கனகச்சிதமான மொழி. இப்படித்தான் இருக்க வேண்டும் கவிதை என தோன்றுகிறது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...