11.3.10

ஹே ராம்


யார் தும்மினாலும்
தீர்க்காயுசு.
தடுக்கி விழ நேர்ந்தால்
ஹே ராம்.
கிண்டலுக்கு ஆளானால்
ராமனே ராமனே.
இயலாது
உடல் நோகும்போது
ராமா எனும் அரற்றல்.
ஆபத்து
யார் தலைக்கு வந்தும்
தலைப்பாகையோடு போனால்
ராம் ராம் என்ற நிம்மதி
நீள் மூச்சு.
உன்னை ராமனுக்குத்
தெரியுமோ தெரியாதோ
உன் போல ராமனை
யாருக்கும் தெரியாது.

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...