6.3.10

யுவா-1


I
ஏணியில்
ஏறி நிற்கிறேன்
மறதியின் சுமையோடு.
II
குழந்தைகளின் சகவாசம்.
இயற்கையின் மடி.
சங்கீதம்.
வேறெதுவுமில்லை.
III
மூடியிருந்த கதவுகள்
திறந்திருக்கின்றன.
உள்ளே எதுவுமில்லை.
IV
நீரின் தாகம்.
காற்றின் புழுக்கம்.
இசையின் மௌனம்.
என்ன செய்யலாம் சொல்?
V
காத்திருந்தேன்.
கடல் தந்தது
அலையும்
ஒற்றைச் செருப்பும்.
VI
செடிக்கும் வாய்க்கவில்லை.
கூந்தலிலும் நிற்கவில்லை.
ரோஜா.
VII
ஓங்கிய கோடரிக்கு
வீழ்ந்தது மரம்.
பறந்தது மரங்கொத்தி.
VIII
முடவன் செதுக்கிய சிற்பம்
காத்து நின்றது
குருடனின் பார்வைக்கு.

2 கருத்துகள்:

பத்மா சொன்னது…

குழந்தைகளின் சகவாசம்.
இயற்கையின் மடி.
சங்கீதம்.
வேறெதுவுமில்லை.

ஆமாம் ஆமாம்

பத்மா சொன்னது…

செடிக்கும் வாய்க்கவில்லை.
கூந்தலிலும் நிற்கவில்லை.
ரோஜா.

:))

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...