11.3.10

யுவா-5


I
கடற்கரை
பலூன்களில்
ஒளிந்திருக்கிறது
குழந்தைகளின் கனவு.
மறுக்கப் பட்டவைகளில்
விற்பவனின்
உயிர்மூச்சு.
II
கரையில்
கடலை விற்கிறான்.
அலைகளை மீறிய
இரைச்சலைப்
பகிர்ந்த பின்
மீதமானது
தாளும் கடலைத்தோலும்.
III
பாசி படிந்த
நினைவுகளில்
மறதியின் கனத்துடன்
தேடிக் கொண்டிருக்கிறேன்
கோபத்துடன் விட்டுச்சென்ற
மகனின்
எப்போதோ சிரித்த முகத்தை.

2 கருத்துகள்:

Madumitha சொன்னது…

குழந்தையின் விரலில்
சேர்ந்தால்தான்
பலூனின் வாழ்வுக்கு
அர்த்தம் கிடைக்கும்.

கவிதை நன்று.

இரசிகை சொன்னது…

nantru.....!

(naanum oru paloon kavithai yezhuthinen)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...