2.3.10

இடைவேளை




உன்னை அடைய முடியாதபடி
என் குரல்.
உன்னால் படிக்க இயலாதபடி
என் கண்களின் மொழி.
உன் நாசிகளைத் தொட இயலாத
என் வியர்வையின் சுகந்தம்.
உன் கேசங்களைக் கோதிவிட
முடியாதபடி என் விரல்களின்
வருடல்கள்.
உன் அருகில்தான்
மழை நீரில் மிதக்கிற கப்பலை
உற்றுப் பார்த்தபடி
நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறேன்.
அருமையான இசையின் துவக்கத்துக்கும்
கிளரச் செய்யும் பாடலின்
முதல் வரிக்கும் இடையிலான தொலைவு இது.
கவிதை எழுதப்பட்ட தாள்கள்
நனையாதபடிக்குத் தூறல்
மெலிந்த பின் வந்துவிடுவேன்.
பொறு.

1 கருத்து:

பத்மா சொன்னது…

சட்டைக்குள் வச்சுட்டு போங்க சார்! காக்க வைக்காதீங்க

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...