29.9.10

புதிர்



I
எழுதியிருக்கலாம்
தோன்றுகிறது ஒரு நேரம்.

எழுதாமல்
இருந்திருக்கலாம்
தோன்றுகிறது இன்னொரு நேரம்.

ஏதாவதொன்று
தோன்றியபடித்தான்
இருக்கிறது எந்நேரமும்.


II
அவள் வந்தால் இப்படி-

வராது போனால்
அப்படி என்றும்

யூகிக்க முடிகிறது.

என்னவானது
என்று சொல்லவாவது

வரத்தான்
வேண்டியிருக்கிறது அவள்.

III
எங்கேயோ பார்த்ததாகத்
தோன்றாத வரையிலும்

இவளை
அமைதியாகப் பார்க்க முடிகிறது

பின்னொரு முறை
அவளைப் பார்க்கும் வரை.

9 கருத்துகள்:

vasan சொன்னது…

முதல் பார்வைக்கும், அடுத்த‌ பார்வைக்கு(ம்)மிடையில், அப்ப‌டியென்ன‌ ந‌ட‌ந்து விடுகிற‌து, சுந்த‌ர்ஜி....?

சைக்கிள் சொன்னது…

தவிப்பு,தவிப்பும் - நிலைபெறுதலும்,ஊசலாட்டத்தின் கண நேர அமைதி-பின்-நிலைஇழப்பு?

கமலேஷ் சொன்னது…

அவள் வந்தால்
இப்படி-
வராது போனால்
அப்படி என்றும்
யூகிக்க முடிகிறது.
என்னவானது
என்று சொல்லவாவது
வரத்தான்
வேண்டியிருக்கிறது
அவள்.

ஆஹா அஹா..
படிக்கும் போதே கண்ணு சொருகுது.

Vel Kannan சொன்னது…

முதல்
என் அநேக நேரத்து நிலையை
அப்படியே கவிதையாக

இரண்டாவது
கமலேஷ் சொன்னது போல்...
//கண்ணு சொருகுது//
அப்படியே ... கிடக்கிறேன்

மூன்று
அப்படி பார்த்தாலும் சொல்ல முடியவில்லை ஜி
சொன்னாலும் நம்மை ஏற இறங்க பாக்குறாங்க .. ஜி
(சொந்த அனுபவம் தான் ஹி ஹி.. )

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...வார்த்தைகளைக் கட்டியாள்கிறீர்கள் !

சுந்தர்ஜி சொன்னது…

வெவ்வேறு சூழ்நிலைகள் பார்வையின் கோணத்தையும் மாற்றுகின்றன வாசன்.

சரியாய்ச் சொன்னீர்கள் சைக்கிள்.நன்றி.

களிப்பூட்டுது கமலேஷ் உங்கள் கண் சொருகல்.தொடரட்டும் ரசனை.

வேல்கண்ணன்!கொஞ்சம் வித்யாசமா இருந்தா அப்பிடித்தான் பாப்பாங்கப்பூ.கண்டுக்கிடாம கவிதய எளுதிட்டே போங்க.

கட்டிப்போடுவது உங்கள் எழுத்தும் ரசனையும்தான் ஹேமா.

இரசிகை சொன்னது…

:)

yellaame nallaayirukku...

பத்மா சொன்னது…

இப்படி அப்படின்னு எதோ ஒன்று தோன்றியும் தோன்றாமலும் ,அவளை வராது வரச்சொல்லி பாராமல் பார்த்து விடுவீர்கள் தானே ?
சும்மா கிண்டல் ஜி
பின்னே நான் நினைப்பதை எல்லாம் அனைவரும் எழுதிய பின் எனக்கு ஏதும் மிச்சம் வைக்க வில்லையே ....பின் இப்படித்தான் கிண்டல்

சுந்தர் முத்திரை பலே

Madumitha சொன்னது…

வசீகரப் புதிர்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...