23.3.14

இரு திறவுகோல்கள்


#
மெளனம் என்பது
நீங்கள் நினைப்பது போல்
அமைதியல்ல.
சம்மதம் அல்ல.
சகித்தல் அல்ல.
தத்துவச் செறிவில் தோய்ந்த
நிறைவுமல்ல எப்போதும்.
தளும்பும் குளத்தின்
தாமரையாய் முகம் காட்டி -
அடிமென்மணலின்
ஆழங்களில் புரள்கின்றன
அதன் கோக்க இயலாச் சொற்கள்.


#
நீ ஏற்றுக் கொண்டதும்
வியப்பாய் இல்லை.
நிராகரித்து நகர்ந்ததும்
துயரூட்டவில்லை.
நான் சுமந்து திரியும்
ஒற்றைத் திறவுகோல் 
செய்வதில்லையா
ஒரு நேரம் திறக்கவும்
ஒரு நேரம் மூடவும்?

7.3.14

ஒரு குளமும் ஒரு துளியும்

#
என் சலனமற்ற குளத்தில் 
உன் கூழாங்கல்லை எறிந்து 
மூழ்க வைக்கிறது காலம். 

அலையின் சலனம் 
மொக்குகள் மலரக் காத்திருக்கும் 
தாமரைகளைத் தொட்டுச் சமனப்பட -

மீண்டும் குளம் ஆசை கொள்கிறது
மற்றொரு கல்லெறிக்காக.

அலை தயாராகிறது
தாமரையின் தொடலுக்காக.


#

நீயோ பெருமழை.
நான் உன் சிறுதுளி.
நீ பொழிகிறாய்.
நான் வீழ்கிறேன்.
கொடுந்தூரம் கடந்து
கரிக்கும் பெருங்கடலில் 
பொழிந்து உப்பாகிறாய் நீ.
ஒற்றைச் சிப்பியின்
இதழை முத்தமிட்டு
ஸ்வாதி முத்தாகிறேன்
நான்.


தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...