I
ஏணியில்
ஏறி நிற்கிறேன்
மறதியின் சுமையோடு.
II
குழந்தைகளின் சகவாசம்.
இயற்கையின் மடி.
சங்கீதம்.
வேறெதுவுமில்லை.
III
மூடியிருந்த கதவுகள்
திறந்திருக்கின்றன.
உள்ளே எதுவுமில்லை.
IV
நீரின் தாகம்.
காற்றின் புழுக்கம்.
இசையின் மௌனம்.
என்ன செய்யலாம் சொல்?
V
காத்திருந்தேன்.
கடல் தந்தது
அலையும்
ஒற்றைச் செருப்பும்.
VI
செடிக்கும் வாய்க்கவில்லை.
கூந்தலிலும் நிற்கவில்லை.
ரோஜா.
VII
ஓங்கிய கோடரிக்கு
வீழ்ந்தது மரம்.
பறந்தது மரங்கொத்தி.
VIII
முடவன் செதுக்கிய சிற்பம்
காத்து நின்றது
குருடனின் பார்வைக்கு.
ஏறி நிற்கிறேன்
மறதியின் சுமையோடு.
II
குழந்தைகளின் சகவாசம்.
இயற்கையின் மடி.
சங்கீதம்.
வேறெதுவுமில்லை.
III
மூடியிருந்த கதவுகள்
திறந்திருக்கின்றன.
உள்ளே எதுவுமில்லை.
IV
நீரின் தாகம்.
காற்றின் புழுக்கம்.
இசையின் மௌனம்.
என்ன செய்யலாம் சொல்?
V
காத்திருந்தேன்.
கடல் தந்தது
அலையும்
ஒற்றைச் செருப்பும்.
VI
செடிக்கும் வாய்க்கவில்லை.
கூந்தலிலும் நிற்கவில்லை.
ரோஜா.
VII
ஓங்கிய கோடரிக்கு
வீழ்ந்தது மரம்.
பறந்தது மரங்கொத்தி.
VIII
முடவன் செதுக்கிய சிற்பம்
காத்து நின்றது
குருடனின் பார்வைக்கு.
2 கருத்துகள்:
குழந்தைகளின் சகவாசம்.
இயற்கையின் மடி.
சங்கீதம்.
வேறெதுவுமில்லை.
ஆமாம் ஆமாம்
செடிக்கும் வாய்க்கவில்லை.
கூந்தலிலும் நிற்கவில்லை.
ரோஜா.
:))
கருத்துரையிடுக