21.2.14

இரு கவிதைகள்

#
ஒரு தடவை கூடக்
கற்றுக் கொடுக்கவில்லை
ஊனம் என்ற சொல்லுக்கு.
காலங் காலமாகக்
கட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு தடவை கூடக்
கற்றுக் கொடுக்கவில்லை
சிறகு என்ற சொல்லுக்கு.
காலங் காலமாகப்
பறந்து கொண்டே இருக்கிறது.

#
ஒரு நீர்த்தொட்டியின் 
துவாரத்திடம் இருந்து
உள்ளிருப்பவற்றை
வெளியேற்றவும் - 
நடுக்கடலில் படகின் 
துவாரத்திடம் இருந்து 
வெளியிருப்பவை
உட்புகாதிருக்கவும் - 
கற்றவனுக்கு 
வேறேதும் போதனை 
புதிதாய்த் தேவையில்லை.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஊனம் சிறகு - உண்மை...

போதனை அருமை...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...