9.2.15

சிற்றெறும்பு குருமார்கள்

நேற்று முதல் எங்கள் வீட்டு சர்க்கரையையும், கடலை மாவையும் ருசி பார்க்க சிற்றெறும்புகள் வரிசையில் வர ஆரம்பித்து விட்டன.

"வாங்க வாங்க குட்டிப் பசங்களா! ஓய்வு நல்ல முறையில் செலவானதா?" என்று வரவேற்றேன் புன்னகையுடன்.

:சிவராத்திரிக்குப் பின் பனி சிவசிவா என்று போகும்' என்ற பழமொழியின் அளவுகோலால் நாம் கோடையை அளப்பது வழக்கம்.

ஆனால் கோடை துவங்கி விட்டதை இத்தனை துல்லியமாக - மைக்ரோ நொடியைக் கூடக் காட்டும் - மிக நவீன கடிகாரம் கூடச் சொல்லி விட முடியாது.

இத்தனை நாளும் அந்தச் சிற்றெறும்புகள் எங்கே வாழ்ந்தனவோ, எப்படி உண்டனவோ தெரியவில்லை என்று முதலில் யோசித்த சிறுபிள்ளைத்தனம் என்னை வெட்கச் செய்தது.

மாறாக இறுதியாய் மழைக் காலத்தின் முந்தைய நாள் வரை சேமித்த, அவற்றின் சேமிப்பில் இருந்த சேகரம் அவற்றின் தேவையை எப்படி இத்தனை கச்சிதமாக நிறைவு செய்தது என்ற பிரமிப்பு எனக்குள் மலைப்பைக் குமிழியிடச் செய்தது.

ஆனாலும் நாளை முதல் நம் உழைப்பு தொடங்க இருக்கிறது என்பதை ஒரே நேரம் உணர்ந்து, கட்டுக்கோப்புடன் பணியில் இறங்கி விட்டன.

எந்த ஆரவாரமும் இன்றி நிசப்தம் ஒலிக்க இயங்கும் அந்தச் சிற்றெறும்புகள் உருவத்தால் மட்டுமே சிறியன. போதனையில் அவையே நமது உண்மையான குருமார்கள்.

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...